வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 28 டிசம்பர், 2010

மீண்டுமோர் ஆயுதப்போராட்டம் ஏற்படாமல் தடுப்போம்: அமைச்சர் முரளிதரன்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவரும் மனித படுகொலைகளினால் மீண்டுமொரு ஆயுத போராட்டம் வெடிப்பதை தடுப்பதற்கு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென பொலிஸ்மா அதிபருக்கும் பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.


அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

ஆயுதம் தரித்த இனந்தெரியாத நபர்களினால் கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணத்தில் கொலைகள் இடம்பெறுகின்றன. இரண்டு வாரங்களின் முன்னர் கோயில் குருக்கள், நேற்று பிரதி கல்விப்பணிப்பாளர். இவர்கள் ஆயுததாரிகளினால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்படியான கொலை சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மீண்டுமொரு ஆயுதப்படை உருவாகுவதற்கு இதுபோன்ற சம்பவங்கள் வழியமைத்துக் கொடுத்துவிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’