வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

வடக்கு கிழக்கில் நன்கொடையாளர்களின் நிதியில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிப்பதை நிறுத்த உத்தரவு

டக்கு கிழக்கில் நன்கொடையாளர்களின் மானியங்கள் மற்றும் கடன்களின் மூலம் புதிய கட்டிடங்களை நிர்மாணிக்கும் திட்டங்கள் டிசெம்பர் 9 ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டுள்ளன.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இப்பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்பார்வை செய்யும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தற்போதுள்ள கட்டிங்களை புனரமைப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பணிப்புரை விடுத்துள்ளார்.
நெல் மற்றும் ஏனைய விவசாய உற்பத்திகளை களஞ்சியப்படுத்துவற்கான கட்டிடங்கள் மாத்திரமே விதிவிலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜபக்ஷவின் பணிப்புரையை இது தொடர்பான சகல அமைச்சுகள் மற்றும் இம்மாகாணங்களிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சின் மேலதிக செயலாளர் நிஹால் சோமவீர அறிவித்துள்ளார். இத்தீர்மானத்திற்கான காரணம் கூறப்படவில்லை.
வடக்கு கிழக்கில் உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் ஒரு பகுதியாக கட்டிடங்களை அமைப்பதற்கு நிதி வழங்க முன்வந்த உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பானிய முகவரம் ஆகியனவற்றின் உள்ளுர் அலுவலகங்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
களஞ்சியசாலைகள் தவிர்ந்த ஏனைய கட்டிடங்களை அமைப்பதற்கான விதிவிலக்கான தேவைகள் இருப்பின் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் சம்மதத்தைப் பெறவேண்டும் எனவும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானத்தால் இந்திய நிதியுதவியுடன் 50000 வீடுகளை அமைக்கும் திட்டம் பாதிக்கப்படுமா என்பது உடனடியாக தெரியவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’