கனடாவிலிருந்து நாடுதிரும்பிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொட்டாஞ்சேனை ஹின்னி ஹப்புஹாமி மாவத்தையில் அமைந்துள்ள அவரது வீட்டில் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆரோக்கியம் சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவிலிருந்து நாடு திரும்பிய இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்பது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றுக்காலை இவரது சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்தகொண்டதாக கூறப்படும் குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இந்தியாவில் வசித்து வருவதாகவும் சிகிச்சை பெறுவதற்காகவே இவர் இலங்கை வந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தூக்கில் தொங்கியநிலையில் இவரது சடலம் நேற்று மீட்கப்பட்டபோது அதற்கு அருகில் தமிழினால் எழுதிய கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனைப் பொலிஸார் திவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’