வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 நவம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழுவின் திருமலை விஜயம்

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு எதிர்வரும் டிசம்பர் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலை செல்லவுள்ள ஆணைக்குழு உறுப்பினர்கள் 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது.
4ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மூதூர் பிரதேச செயலகத்தில் சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளது. அன்று மாலை சம்பூர் பிரதேசத்திற்கான விஜயத்தினை ஆணைக்குழு உறுப்பினர்கள் மேற்கொள்ளவுள்ளனர்.
5ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குச்சவெளி பிரதேச செயலகத்திலும் சாட்சிகளை பதிவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’