வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 நவம்பர், 2010

எல்.ரீ.ரீ.ஈ. யின் புதிய தலைவராக, 2009 இல் இறந்ததாக அறிவிக்கப்பட்ட சிரேஷ்ட புலி

டந்த வாரம் இந்த பத்தியில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு வலைமைப்பு பற்றி எழுதும்போது நான், வெளிநாட்டில் புலி மற்றும் புலி ஆதரவு அமைப்புகளை பெரும்படியாக இரண்டு வகைக்குள் அடக்கலாம் என குறிப்பிட்டேன்.
இதில் முதலாவது வகையில் எல்.ரீ.ரீ.. இன் முகப்பு நிறுவனங்களும் எல்.ரீ.ரீ. க்கு அனுதாபமாகவுள்ள நிறுவனங்களும் அடங்கும். இந்த முதல்வகையில் நியூயோர்க் சட்டத்தரணியான விசுவநாதன் ருத்ரகுமாரன் தலைமை தாங்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்(TGTE) , ஜேர்மனியில் நிலைகொண்டுள்ள கத்தோலிக்க குருவான வண.பிதா. எஸ்.ஜே.இமானுவலின் கீழ் உள்ள உலக தமிழ் அரங்கம்  (GTF) மற்றும் நோர்வேயில் வாழ்கின்ற நெடியவன் அல்லது பேரின்பநாயகம் சிவபரன் கட்டுப்பாட்டில் உள்ள எல்.ரீ.ரீ.. கிளைகளும், முகப்பு நிறுவனங்களும் அடங்கும். இதுபற்றி சென்ற வாரம் விரிவாக எழுதியுள்ளேன்.
 இந்த வாரம் நான் குவியப்படுத்தப்போவது வெளிப்படையாக இயங்காத, பொறுப்புக் கூறும் நிலையில் காணப்படாத புலி அமைப்புகளின் இரண்டாவது வகையாகும். இந்த வகை, இதன் இரகசியமாக தொழிற்படும் தன்மையாலும் தீவிர நோக்கங்கள் கொண்டதாக இருப்பதாலும் மிக அதிகளவில்  ஆபத்தானதாகும். ஒரு வகையில் பார்த்தால் இதுவே தமிழ் புலம்பெயர்ந்தோரிடையில் காணப்படும் 'உண்மையான எல்.ரீ.ரீ..' ஆகும். இதற்கும் மேலாக சிரேஷ்ட புலி கேணல் ஒருவர் இதற்கு தலைமை தாங்குகிறார். இவர் கடந்த பெப்ரவரியில் யுத்தத்தில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டவர்.
 உயிர்த்தெழுந்த இந்த புலித்தலைவர் பற்றியும் இவரின் தலைமையில் 'உண்மையான எல்.ரீ.ரீ..' மீண்டும் அணிதிரள்வதைப் பற்றியும் மேலும் விளக்குவதற்கு முன் வெளிநாட்டில் உள்ள முதல் வகையில் அடங்கும் புலி அல்லது புலிசார்பு அமைப்பின் மூன்று பிரதான அணிகளின் முக்கிய இயல்புகளை வலியுறுத்திக் காட்டவிழைகின்றேன்.
 நாடுகடந்த தமிழீழ அரசும் உலக தமிழ் அரங்கமும்
 இந்த வகை, எல்.ரீ.ரீ.. யுடன் உறவை வைத்துள்ள போதும், உலகின் பல பகுதிகளிலும் வெளிப்படையாக இயங்குகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம ; (TGTE) உலக தமிழ் அரங்கம் (GTF)  ஆகியவற்றின் செயற்பாடுகள் தெரியக் கூடியதாகவும் வெளிப்படையாகவும் சில வகையில் பொறுப்புக் கூறும் தன்மை கொஞ்சத்தைக் கொண்டனவாகும் உள்ளன.
 நாடு கடந்த தமிழீழம் அரசு அமெரிக்காவின் பிலெடெல்பியாவிலும் நியூயோர்க்கிலும் இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளது. இதற்குசட்ட மன்றம், சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதமர், மூன்று பிரதி அமைச்சர்கள் கொண்ட வெளிப்படையான நிர்வாக அமைப்பு இதற்கு உண்டு. வெகு விரைவில் பிரதிநிதிகளின் இரண்டாவது சபை அமைக்கப்படவுள்ளது. வெகுவிரைவில் நியூயோர்க்கில்  ஐக்கிய நாடுகளுக்கு அண்மையில் நிரந்தர அலுவலகமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)அமைக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
 நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), வடக்குகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குதல் உட்பட கவர்ச்சிகரமான நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்துள்ளது. அறியப்பட்ட சகல, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்கத்தினர் சகலரும் கறுப்புப் பட்டியிலிடப்பட்ட நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் இந்த நிறுவனம் எவ்வாறு தனது திட்டத்தை செயற்படுத்த போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நெடியவனின் கட்டுப்பாட்டில் உள்ள அணியினரின் கடும் அழுத்தத்துக்கும் உட்படுகின்றது.
 உலக தமிழ் அரங்கத்தின் (GTF)  கீழ் வரும் அமைப்புகளின் வலையமைப்பின் தலைவர் முன்னாள் யாழ்ப்பாண கத்தோலிக்க மறை மாவட்ட மாகாண முதல்வர் வண.பிதா எஸ்.ஜே.இமானுவேல் ஆவார். உலக தமிழ் அரங்கம் (வுபுவுநு) நியாயமான அளவுக்கு வெளிப்படையாக இயங்குகின்றது. உலக தமிழ் அரங்கம் பதினாண்டு வௌ;வேறு நிறுவனங்களை கொண்டுள்ளபோதிலும் அதன் உற்சாகமான, தொழிற்படும் நிறுவனமாக பிரித்தானிய தமிழ் அரங்கமே (BTF) உள்ளது. பிரித்தானிய தமிழ் அரங்கத்தின் முயற்சியில்தான் உலக தமிழ் அரங்கம் லண்டனில் செயலகத்தை அமைக்க முடிந்தது.
பாராட்டப்படக் கூடிய நடவடிக்கையாக பிரித்தானிய தமிழ் அரங்கம் (BTF) முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன் றியான் என்பவரை பிரித்தானிய தமிழ் அரங்கத்தின் லண்டன் செயலகத்தின் பொறுப்பாளராக சேவையாற்ற இணைந்துள்ளது. நாளாந்த ரீதியில் வாராந்த ரீதியிலும் றியானுக்கு உதவுவதற்கு இரண்டு இளம் ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர். உலக தமிழ் அரங்கம் (BTF)   பொது மக்கள் உறவு, ஊடக உத்தியோகத்தர்கள் உட்பட முழு அளவிலான ஆளணியை உருவாக்கும் செயன்முறையில் ஈடுபட்டு வருகின்றது.
நெடியவனால் தலைமை தாங்கப்படும் வலையமைப்பு, எல்.ரீ.ரீ., இன் கிளைகளையும் முகப்பு நிறுவனங்களையும் பிரதானமாகக் கொண்டுள்ள வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)   உலக தமிழ் அரங்கம் (GTF) என்பவற்றிலிருந்து வேறுபடுகின்றது. எல்.ரீ.ரீ., அநேகமான மேற்கத்தைய நாடுகளில், பயங்கரவாத இயக்கமென தடைசெய்யப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்ட புலிகள் அமைப்பின் கிளைகள் உறங்கு நிலைக்கு போயின அல்லது வேறு அமைப்புகளாக தம்மை மாற்றியமைத்துக் கொண்டன. புதிய அமைப்புக்கள் உருவாக்கப்பட்டன.
நெடியவனால் தலைமை தாங்கப்படும் எல்.ரீ.ரீ.. சதிக் குழு,  மதியுரைஞர் என தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும், தமிழ்நெட் இணையத்தளத்தின்  ஆசிரியரான ஜெயச்சந்திரன் கோபிநாத் அல்லது  ஜெயா அண்ணை என்பவரினால் வழிநடத்தப்படுகின்றது.  நெடியவன் குழு ருத்ரகுமாரன் தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் முன்னாள் எல்.ரீ.ரீ.. விசுவாசியாகிய  கேபி என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனின் சகல விசுவாசிகளுக்கும் எதிரானதாக உள்ளது. இருப்பினும் உலக தமிழ் அரங்கத்தின் தலைவர் வண. பிதா இமானுவலுக்கும் நெடியவனுக்கும் இடையில் நல்லுறவு காணப்படுகின்றது. இதற்கு வண. இமானுவல் நெடியவனின் இலட்சியம் சார்ந்த 'தொட்டப்பா' வாக கருதப்படுவதே காரணமாகும்.
ஒவ்வொரு நாட்டுக்குமான ருத்ரகுமாரனின் நாடுகடந்த தமிழீழ அரசாங்;கத்தின் பிரிவுகளை முடக்கும் முயற்சியாக நெடியவனின் குழுவும் தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே பல்வேறு நாடுகளில் தேர்தல் மூலம் அமைக்கப்பட்ட நிறுவனங்களின் வலைமைப்பை நிறுவியுள்ளது.
இந்த நிறுவனங்கள் அந்தந்த நாட்டின் மக்கள் பேரவை அல்லது தேசிய பேரவை என அழைக்கப்பட்டன. தமிழ் ஈழக் கோரிக்கையை மே.14 ,1976 இல் முறைமையாக வெளிப்படுத்திய தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் வட்டுக்கோட்டை பிரகடனத்துக்கான ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நிறுவனங்கள் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்தோரிடையே, தொடர்ச்சியாக சர்வசன வாக்கெடுப்புகளை நடத்தின.
அண்மைக்காலத்தில் உருத்திரக்குமாரனால் வழிநடத்தப்படும் நாடுகடந்த தமிழீழ அரசாங்க அணியை தனிமைப்படுத்தும் ஒரு முயற்சியாக உலக தமிழ் அரங்கத்திற்கும் நெடியவனின் வலைமைப்புக்குமிடையில் கூடிய ஒற்றுமையை ஏற்படுத்தும் கடும் முயற்சிகள் நடந்துள்ளன. வண. இமானுவலுக்கும், நெடியவனின் பிரதிநிதிகளுக்குமிடையில் ஒற்றுமைக்கான பேச்சுவார்த்தை நோர்வேயில் வெள்ளிக்கிழமை நவம்பர் 12 இல் நடைபெறவுள்ளது. இந்ந பேச்சுவார்த்தையின் ஏற்பாட்டாளர்களாக  நோர்வேயில் நிலைகொண்டுள்ள ' தமிழ்நெற்' ஆசிரியர் குழாம் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 இருமை
 நான், நெடியவன் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளின் வலையமைப்பை புலி மற்றும் புலி சார்பு அமைப்புகள் என்பதற்குள் சேர்த்திருந்தாலும் இவ்வாறு இறுக்கமாக பிரித்துப் பிரித்து நோக்குவது கடினமானது. உள்ளார்ந்த இருமையின் காரணமாகவே இது இப்படி உள்ளது. இவ்வாறாக தொழிற்படுபவர்கள் ஒரு மட்டத்தில் ஜனநாயக ரீதியாக செயற்படும் அரசியல் தொழிற்படுநர்களாக தம்மைக் காட்டிக் கொண்டாலும் இவர்களில் பலர் வேறொரு மட்டத்தில் இரகசிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனெனில் இந்த அமைப்புகள் சட்டபூர்வமான அரசியல் அமைப்புகளாக காட்டிக்கொண்டாலும் அடிப்படையில் எல்.ரீ.ரீ.. கிளைகளே.
 நெடியவனின் வலைமைப்பு வேறு மாதிரியாக நடித்துக்கொண்டிருந்தாலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழ் அரங்கம் ஆகியவற்றுடன் ஒப்பிடுமிடத்து அது வெளிப்படை தன்மைத்தானதோ அல்லது பொறுப்புக் கூறும் வகையில் உள்ளதோ அல்ல. இதனது ஜனநாயகத் தன்மை குறித்த பதவிகள் திருப்தியானவை அல்ல. நெடியவனின் வழிச்செல்வோர் அஹிம்சை வழியை வகுத்துக் கொண்டவர்கள் அல்லர்.
சந்தேகங்களுக்குரிய கடந்த காலங்களை உடைய தொழிற்படுநர்களை கொண்டுள்ள நிலையில், நெடியவனின் வலையமைப்பு தெளிவில்லாத தோற்றத்தை கொண்டுள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள முக்கிய பதவியிலுள்ளோர் எல்.ரீ.ரீ. இன் முன்னாள் உறுப்பினர்களாகவும் ஆயுதப்பயிற்சி பெற்றவர்களாகவும் போர்க்கள அனுபவம் உடையவர்களாகவும் உள்ளனர்.
அத்துடன் நெடியவனின் அணியின் பல அங்கத்தவர்கள், அண்மைக்காலத்தில், போதை வஸ்து, கடத்தல், கடன் அட்டை மோசடிகள், கள்ளப்பணம், கடவுச்சீட்டு போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.
 நெடியவன் பற்றியும் தமிழ் புலம்பெயர்ந்தோரின் புலி, புலி சார்பு ஆட்களிடையே இவரை தலைமைத்துவத்துக்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகள் பற்றியும் ஏற்கெனவே நிறைய இப்பத்தியில் எழுதப்பட்டுள்ளது.
பதினெட்டு வயதில் எல்.ரீ.ரீ..யில் இணைந்த நெடியவன், ஆயுதப் பயிற்சியையும் போர்க்கள அனுபவத்தையும் பெற்றுள்ளார். நெடியவன், தனது பிரிவுத்தலைவரான வீரகுலசிங்கம் அல்லது மணிவண்ணனால் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.. கிளைகளின் பிரதான இணைப்பாளராக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டார்.
 1991 ஆனையிறவு யுத்தத்தில் காயப்பட்டு கழுத்துக்கு கீழ் உடல் செயலற்றுப்போன நிலையிலும் மே 2009 இல் இறக்கும் வரையில் காஸ்ட்ரோ எல்.ரீ.ரீ..யின் வெளிநாட்டு நிர்வாகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். யுத்தம் கடுமையாகி எல்.ரீ.ரீ.. தலைமையகத்திற்கும வெளிநாட்டு கிளைகளுக்கும் இடையில் தொடர்பாடல் மட்டுப்படுத்தப்பட்டபோது, காஸ்ட்ரோ, வெளிநாட்டு கிளைகளை நிர்வகிப்பதில் நெடிவனுக்கு கூடிய அதிகாரத்தை வழங்கினார்.
காஸ்ட்ரோவின் மரணத்தின் பின், மே 2009 முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின் நெடியவன் எல்.ரீ.ரீ..இன் வெளிநாட்டு நிர்வாகத்தை முழுமையாக எடுத்துக்கொண்டார். இதை தொடர்ந்து நெடியவன் செல்வராசா பத்மநாதனின் தலைமைத்துவத்தை வெறுத்தார், எதிர்த்தார். இது ஒரு வகையில் காஸ்ட்ரோ, கே.பி. இடையிலான பகைமையின் தொடர்ச்சியாகும். இதனால் புலம்பெயர்ந்தோரிடையான எல்.ரீ.ரீ.. அமைப்புகள்  கே..p சார்பான, நெடியவன் சார்பான அணிகளாக பிளவுபட்டன.
வலையமைப்பு
கே.பி. மலேசியாவில் பரபரப்பாக பேசப்படும் வகையில் பிடிபட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை நிலைமையை மாற்றியது.  அதன் பின் நெடியவன் மீண்டும் ஆதிக்கம் பெற்றவரானார். ஆயினும் கே.பி. ஆதரவாளர்கள் ருத்ரகுமாரனுடன் அணி சேர்ந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதில் நாட்டம் செலுத்தினர்.
 
நாடுகடந்த தமிழீழ அரசை பலவீனப்படுத்த, அல்லது முடக்க அல்லது கைப்பற்ற நெடியவன் தலைமையிலான சதிக்குழு மேற்கொண்ட கடும் முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. 'பிரதமர்' ருத்ரகுமாரன், கே.பியுடனான உறவுகள் கெட்டுப்போன நிலைமையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான தனது கட்டுப்பாட்டை பேணி வருகிறார்.
நெடியவனின் வலைமைப்பையிட்டு கவலையூட்டும் விடயமாக அதன் பிரதான செயற்பாட்டாளர்களுக்குள்; எல்.ரீ.ரீ.. உறுப்பினர் அல்ல. முன்னாள் எல்.ரீ.ரீ.. உறுப்பினர்கள் பல வகையிலும் ஆதிக்கம் செலுத்துவது உள்ளது. பல வருடங்களாக, இலங்கையில் எல்.ரீ.ரீ.. உறுப்பினராக இருந்திராத ஆதரவாளர்கள், தொழிற்படுநர்களாலேயே வெளிநாட்டு எல்.ரீ.ரீ.. கிளைகளும், முகப்பு நிறுவனங்களும் நடத்தப்பட்டு அல்லது நிர்வகிக்கப்பட்டு வந்தன. அகதிகளாக வெளிநாட்டுக்கு வந்த பல முன்னாள் புலிகள் உரிய காரணத்துக்காக, தமது புலித்தொடர்புகளை மறைத்துவிட்டு தம்மை புலி அமைப்புகளுடன் அடையாளம் காட்டாமல், தமக்கு ஆதரவளித்த நாடுகளில் சட்டம் ஒழுங்கை மதித்து வாழ்ந்து ஒன்றிணைய விரும்பினர்.
2002-2005 காலப்பகுதியில் ஒஸ்லோ அநுசரணையுடன் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த காலத்தில் எல்.ரீ.ரீ.. இன் உயர் அதிகார மட்டம், வெளிநாடுகளிலிருந்த எல்.ரீ.ரீ.. தலைமைத்துவங்களுக்கு பதிலாக பயிற்றப்பட்ட புலி உறுப்பினர்களை இலங்கையிலிருந்து அனுப்பத் தீர்மானித்தது.  வெளிநாடுகளில் அப்போது நிர்வாகப் பொறுப்பில் இருந்தவர்களுக்கு ஆபத்துக்களை எதிர்கொள்ளவும் இயக்கவலுவுடன் செயற்படவும் தேவையான குணாம்சங்களும் துணிவும் இல்லாமையினால், வெளிநாட்டு கிளைகள் வினைத்திறனுடன் செயற்படவில்லை என உணரப்பட்டது.
இந்த தீர்மானத்தின் காரணமாக எல்.ரீ.ரீ.. யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி, வெளிநாட்டு புலி அமைப்புகளை பொறுப்பேற்க புலி உறுப்பினர்களை அங்கு அனுப்பியது. எல்.ரீ.ரீ., முன்னர் வெளிநாடுகளுக்கு சென்று குடியுரிமை அல்லது நிரந்தர வசிப்பிட உரிமை பெற்று வாழ்ந்து கொண்டிருந்த முன்னாள் புலிகளை வன்னிக்கு வரவழைத்து இவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி அளித்தபின் அவர்களின் நாடுகளுக்கு தலைமைப் பதவிகளை பொறுப்பேற்க அனுப்பியது.
எல்.ரீ.ரீ.. தமிழ் தொழிற்படுநர்களையும் இங்கு வரவழைத்து அவர்களுக்கு 'சகலதுறை' பயிற்சியளித்து புலி சார்பான செயற்பாடுகளில் முன்னின்று தொழிற்பட அனுப்பிவைத்தது. இவர்களில் பெரும்பான்மையானோர் இளைஞர்களாகவிருந்தனர். இந்த நடவடிக்கையின் பலனாக குறைந்தபட்சம் 23 நாடுகளில், எல்.ரீ.ரீ.. கிளைகளின் தலைமைத்துவம், விசேட பயிற்சியும் கள அனுபவமும் கொண்ட எல்.ரீ.ரீ.. இனால் அல்லது எல்.ரீ.ரீ.. முன்னாள் உறுப்பினர்களால் பொறுப்பேற்கப்பட்டது.
நெடியவன் இப்படியான முயற்சியில், முன்னோடிகளில் ஒருவராக இருந்தார். இவர் தன்னை நோர்வேயில் நிலைப்படுத்திக் கொண்டார். காஸ்ட்ரோவின் அபிமானத்துக்குரியவரான இவருக்கு, வெளிநாட்டு வலையமைப்பின் பிரதான இணைப்பளாராக ஒட்டுமொத்த பொறுப்பு வழங்கப்பட்டது.
புலிகளுக்கு உரித்தான உள்ளார்ந்த இரகசியத் தன்மை, மறைந்து செயற்படும் இயல்பு என்பவை காரணமாக வெளிநாட்டு கிளைகளும் இதே முறையை பொதுவாக கடைப்பிடித்தன. மேற்கத்தைய நாடுகளில் எல்.ரீ.ரீ.. தடை செய்யப்பட்டமை இந்த போக்கை மேலும் அதிகரித்தது.  இதற்கு மேல் பல தொழிற்படுநர்கள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட நிதிசேகரிப்பு, நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பயமுறுத்தல் பலவந்த பிரயோகம் என்பனவும் இடம்பெற்றன. இதனோடு சேர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுதலும் காணப்பட்டது.
எனவே நான், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலக தமிழ் அரங்கம் என்பவற்றுடன் சேர்த்து முதல் வகைக்குள் அடங்கியிருந்தாலும், நெடியவன் கட்டுப்படுத்தும் வலைமைப்பு, அதன் செயற்படும் முறைமை, நிறுவன அமைப்பு என்பவற்றின் காரணமாக மறைந்து இயங்கும் இரண்டாம் வகைக்கே கூடியளவு உரித்தனாது. சுருங்கக் கூறின் நெடியவன் வலைமைப்பு முதல்வகையில் காணப்படினும் அதற்கு உரியதல்ல.
கட்டுப்பாடு
நெடியவனின்; பிரதான பொறுப்பு எல்.ரீ.ரீ.. வலையமைப்பின் மீதான கட்டுப்பாட்டை வைத்துக்கொள்வதாக இருந்து வருகிறது. கே.பி. பிடிபட்டதன் பின், இதில் அவர் ஓரளவு வெற்றிபெற்றார் என்று கூறலாம். கே.பி. ஆதரவாளர்களில்  பலர், வெளிநாட்டு எல்.ரீ.ரீ.. மீதான கட்டுப்பாட்டை பெறுவதற்கான போராட்டத்தை கைவிட்டு விட்டனர்.
பதிலாக பாதிக்கபட்பட எல்.ரீ.ரீ.. உறுப்பினர்களுக்கும் வடக்கு, கிழக்கு பொதுமக்களுக்கும் நேடோ (NERDO)  ஊடாக புனர்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்துக்கும் கே.பி. மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் ஈடுப்பட்டுள்ளனர். ருத்ரகுமாரனின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், எல்.ரீ.ரீ. இன் வெளிநாட்டு கிளைகளிடையே அடிமட்ட ஆதரவில்லாத மேட்டுகுடி நிறுவனமாகவே அதிகம் காணப்படுகிறது.
நெடியவனின் வலையமைப்பு மே 2009 அனர்த்தத்தின் பின் புலம் பெயர்ந்தோரின் மனோதிடத்தை தக்கவைத்துக்கொள்ளவும், நிதிசேர்க்கவும் சிரமப்படுகின்றது. நெடியவன் குழு பொய், கட்டுக்கதை என்பவை மூலம் கட்டுப்பாட்டை தொடரவும் பணம் சேகரிக்கவும் முயல்கின்றது.
இதில் முக்கியமானது பிரபாகரனும், பொட்டு அம்மானும், உயிருடன் உள்ளனர் என்பதாகும்.  அண்மையில் 12,000 புலிகள் இலங்கையின் மீது பாய்வதற்கு தயாராகி வருகின்றனர் என்ற கதை பரப்பப்படுகின்றது.
இப்படியான முயற்சிகள் மற்றம்  விடாப்பிடியான ஊடகங்களின் பிரச்சாரம் என்பன காணப்பட்டபோதும் நிதி சேகரிப்பு இரண்டு வருடங்களுக்கு முன் இருந்ததின் 10-15 சத வீதம் அளவுக்கு குறைந்து விட்டது. எல்.ரீ.ரீ.. நிறுவனங்களை நடத்தும் பினாமிகள் அவற்றை தமது தேவைக்கு பயன்படுத்துகின்றனர். சிலர் தமது பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.. இன் சொத்துக்களை விற்று பணத்தை எடுக்கின்றனர்.
முன்னர் நெடியவன் சதிக்குழுவின் குறைபாடக காணப்பட்டது எல்.ரீ.ரீ.. பயனொழிந்துபோன சக்தியல்ல என தமிழ் புலம்பெயர்ந்தோரை நம்பவைத்து அவர்களிடம் விசுவாசத்தையும், உற்சாகத்தையும் தோற்றுவிக்கவும் ஆதரவாளர்களை செயற்பட வைக்கவும் அவர்களால் முடியாமல் போனமையாகும்.
புதிய நிலைமையொன்று தோற்றம் பெற்றுள்ளதால் இப்போதைய நிலைவரம் மாற்றத்துக்கு உள்ளாகிக்கொண்டு வருகின்றது. முக்கியமான எல்.ரீ.ரீ.. செயற்படுநர்களை கவர்ந்துவரும் ஒரு 'தலைவரை'  வெளிநாட்டு புலிகள் கண்டுவிட்டனர் போலத் தெரிகிறது. இவர் வேறு யாருமில்லை. இவர்தான் பெப்ரவரி 2009 இல் சண்டையில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ஒரு சிரேஷ்ட கடற்புலி தலைவராவார்.
சாளை
பெப்ரவரி 2009 முதல் வாரத்தில், பிரிகேடியர் பிரசன்ன டி சில்வாவினால் வழிநடத்தப்பட்ட 55 படைப்பிரிவு, முல்லைத்தீவு கரையில் அமைந்த சாளையில் கடற்புலி தளத்துக்கு எதிராக வெற்றிகரமான தாக்குதல் ஒன்றை நடத்தியது. பிரசன்னவுக்கு பின்னர் 59 படைப்பிரிவின் தலைமைப் பதவி வழங்கப்பட்டது. இவர் மே 2009 இல் வட்டுவாகலில் அமைந்த எல்.ரீ.ரீ.. இன் நிலைகளுக்கு எதிராக தீர்க்கமான தாக்குதலை நடத்தினார். பின்னர் ஜெனரலாக உயர்த்தப்பட்ட அவர் , இப்போது லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றுகின்றார்.
பெப்ரவரி 2009 இல் கடல்நீரேரியை கடந்து இராணுவ தளத்துக்கு வடக்கேயிருந்த கடற்புலிகளின் நிலைகளை 55-2 படையணியின் கெமுனு வோச் 4 தாக்கியது. அதில் இறந்து போனவர்களில் முக்கியஸ்தர்களாக லெப் கேணல் சின்னக் கண்ணன் மேஜர் அண்ணவேலன் ஆகியோர் காணப்பட்டனர்.
அடுத்த நாள் புலிகளின் காவலரண்களை படையினர் அழித்தொழித்து கடற்புலிகளின் தளத்தை கைப்பற்ற எல்.ரீ.ரீ.. இன் படையினர் பின்வாங்கினர். கொல்லப்பட்டவர்களிடையே கடற்புலி பிரதி தளபதி விநாயகம், சிரேஷ்ட கடற்புலித் தலைவர்கள் பகலவன், கதிர், கண்ணன் ஆகியோர் இருந்ததாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடற்புலிகளின் தலைமையில் மூன்றாவது இடத்தை விநாயகம் வகித்தார் என கூறப்பட்டது. இவர் கடற்புலிகளின் விசேட தளபதி சூசை, தளபதி செழியன் ஆகியோருக்கு அடுத்த நிலையில் இருந்தவர்.
அப்போது இராணுவ பேச்சாளராக இருந்த பிரிகேடியர் நாணயக்கார, கடற்படையின் பேச்சாளராக இருந்த கப்டன் தஸநாயக்க ஆகிய இருவரும் விநாயகமூர்த்தியின் மரணம் பற்றி ஊடகங்களுக்கு அறிவித்தனர். இந்த நிகழ்வு இலங்கையிலும்; வெளிநாடுகளிலும் அறிவிக்கப்பட்டது. விநாயகத்தின் மரணம் எல்.ரீ.ரீ..இன் தொடர்பாடல்களை ஒட்டுக்கேட்டதன் மூலம் அறியப்பட்டதாகவும் அவரின் உடல் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
அந்த நேரத்தில் எல்.ரீ.ரீ.., விநாயகத்தின் மரணத்தை உறுதிசெய்யவும் இல்லை, மறுக்கவும் இல்லை. கிளிநொச்சியின் வீழ்ச்சிக்கு பின் போர்க்கள செய்திகளை ஒழுங்கு முறையாக அறிவிப்பதை எல்.ரீ.ரீ.. நிறுத்தியிருந்தது. அது மரணித்த போராளிகளுக்கு பகிரங்கமாக அஞ்சலி செலுத்துவதையும், புலிகளின் இழப்புப்பற்றிய அரசாங்கத்தின் கூற்றுக்களை மறுத்துரைப்பதையும் நிறுத்தியிருந்தது. அதன்பின் விநாயகம் பற்றி செய்தியேதும் வரவில்லை. அந்த சிரேஷ்ட கடற்புலி தலைவர் உயிருடன் இல்லை என்றே பொதுவாக கருதப்பட்டது.
மைல் போ(ர்Mile Four
ஆனால், அது உண்மையில்லை. சாளையில் நடந்த சண்டையில் விநாயகம் கொல்லப்படவில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. சாளை கடற்புலித் தளம் வீழ்வதற்கு சில வாரங்களின் முன் சில இரகசிய பொறுப்புகள் வழங்கப்பட்டு, விநாயகம் இந்தியாவுக்கு இரகசியமாக அனுப்பப்பட்டிருந்தார். 'மைல்போ(ர்)' என்பது விநாயகத்தின் தொடர்பாடலுக்கான ஆளடையாள இரகசிய குறியீடு ஆகும். புலிகளின் தொடர்பாடல்களை கண்காணித்து வந்த பாதுகாப்பு படையினரை பிழையாக வழிநடத்தி 'மைல் போ(ர்)' இறந்து விட்டதாக நம்பவைத்தனர்.
ஏமாற்றப்பட்ட படைத்தரப்பினர் கடற்புலியின் தலைமையில் மூன்றாவது இடத்திலிருந்த விநாயகம் கொல்லப்பட்டுவிட்டதாக சகல இடங்களுக்கும் அறிவித்தது. விநாயகத்தின் இந்திய பயணத்தின் நோக்கம் அறியப்படவில்லை. ஆனால் புலிகளின் மீயுயர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அங்கீகரத்துடன் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டு அம்மானால் இவருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது. பிரபாகரனின் அறிவுறுத்தலின் பேரிலேயே விநாயகம் கடற்புலிகளிலிருந்து புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் இந்தியாவில் ஒரு பொறுப்பு வழங்கபட்டதாகவும் தெரிகிறது.
விநாயகம் தனக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட பொறுப்பை எவ்வளவு தூரம் நன்றாக நிறைவேற்றினார் என்பதுவும் தெரியவில்லை ஆனால் மே 2009 இல் எல்.ரீ.ரீ.. இன் தீர்க்கமான இராணுவ ரீதியான தோல்வியின் பின் இந்தியாவை விட்டுச்சென்று, ஒரு தென்னாசிய நாட்டில் சிலகாலம் தங்கியிருந்துவிட்டு ஐரோப்பாவை சென்றடைந்தார். இப்போது அவர் ஐரோப்பாவிலுள்ள தாராண்மை நாடொன்றில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார்.
விநாயகம் என்னும் பெயர், இந்துக் கடவுளர்களுள் யானைத் தலைகொண்ட பிள்ளையார் அல்லது கணேஷ் என்னும் தெய்வத்தை குறிப்பது. சிவன், பார்வதி, ஆகியோரின் மகனும், முருகக் கடவுளின் அண்ணனுமான விநாயகர் மீது பல மிகச் சிறப்பான பக்திப் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
 எனக்கு மிகவும் பிடித்த பாடல் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய, 'விநாயகனே வினை தீர்ப்பவனே' என்பதாகும்,
பொதுவாக இந்துக்கள் விநாயகன் அல்லது பிள்ளையாரை வழிப்பட்ட பின்னரே புதிய காரியத்தை ஆரம்பிப்பர், பயணங்களை தொடங்குவர்.
 விநாயகம்
விநாயகம் என்னும் இயக்கப்பெயரை கொண்ட இந்த சிரேஷ்டபுலித்தலைவர் யாழ்ப்பாண குடாநாட்டில் வடமராட்சி கிழக்கு பிரிவில் மருதங்கேணிஉடுத்துறை பகுதியில் கடலோடி குடும்பம் ஒன்றை சேர்ந்தவர். இவரது இடது கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்புக்கு அண்மிய வள்ளிபுனம் என்னும் கிராமத்தை சேர்ந்த பெண்ணை மணந்துள்ளார்.
கடந்த நூற்றாண்டின் எண்பதுகளின் இறுதிப் பகுதியில், விநாயகம், பதின்ம வயதாயிருக்கும் போது எல்.ரீ.ரீ.. இல் சேர்ந்தார். இவர் இலங்கையின் வடபகுதியில் உள்நாட்டு பயிற்சியை பெற்றார். முதலில் இவர் எல்.ரீ.ரீ.. இன் தென்மராட்சி பிரிவில் சாவகச்சேரியில் வேலை செய்தார். அப்போது தினேஷ் என்னும் இயக்கப் பெயரைக் கொண்டிருந்த எல்.ரீ.ரீ.. அரசியல் பிரிவுத்தலைவர் சுப்பையா பரமு தளபதியாக இருந்தார். இவருக்கு அடுத்த நிலையில் முன்னாள் விளையாட்டுப் பிரிவுத் தலைவர் பாப்பா இருந்தார்.
விநாயகம் தொண்ணூறுகளில் பொட்டு அம்மானின் கீழ் இயங்கிய உளவுப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்பொட்டு அம்மானின் பரம்பரை வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்து விநாயகம், தொழிற்பாட்டார். பொட்டு அம்மானின் வீடு அரியாலை- நாயன்மார்கட்டில் ஆனந்தவடலி வீதிக்கு அண்மையில் இருந்தது. அப்போது இவர் பொட்டு அம்மானுக்கு நெருக்கமானார்.
 தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் தில்லையம்பலம் சிவனேசன் அல்லது சூசையின் கீழ் கடற்புலி பிரிவு தரமுயர்த்தப்பட்டபோது விநாயகம் அந்தப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். கடற்புலி பிரிவில்தான் விநாயகம் தன் திறமையை முழுதாக வெளிப்படுத்தினார். இவர் தருணத்திற்கேற்ப விரைந்து முடிவு எடுக்கும் துணிச்சல் மிக்க போராளியாக இருந்ததாக அறியப்படுகின்றது. விநாயகம் சீராக, முன்னேறி உயர்ந்து வந்தார்.
 2002 இல் போர்நிறுத்தம் அமுலில் இருந்தபோது ஐரோப்பியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட புலிகளின் தூதுக்குழுவில் விநாயகம் அங்கம் வகித்தார். இவர் போலிக்கடவுச் சீட்டை பயணத்திற்கு பயன்படுத்தினார். இவர், பல்வேறு கப்பல் கட்டும் தளங்களுக்கு சென்று அங்கிருந்த பல்வகைப்பட்ட கடற் கலங்களை பார்வையிட்டதாக கூறப்படுகிறது.
 கடற் புலிகளின் விசேட தளபதி சூசைக்கும் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மானுக்கும் இடையில் காணப்பட்ட பகைமை எல்.ரீ.ரீ.. வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டதே. பொட்டு அம்மான், சூசை ஆகிய இருவருடனும் நல்லுறவை பேணிய உயர்மட்ட கடற்புலிகள் சிலரில் விநாயகமும் ஒருவராக இருந்தார்.
 2007 இல் கடலில் நடந்த விபத்து ஒன்றில் சூசையின் இளைய மகன் கொல்லப்பட்டார். சூசையும் இதில் காயமடைந்தார். சிறிது காலம் அவர் வெளியில் வரவில்லை. இது பல்வேறு வதந்திகள் பரவ காரணமாயிற்று. பொட்டு அம்மான் சூசையை ஒழித்துக் கட்டிவிட்டார் எனவும் சூசையின் கதை முடிந்துவிட்டது  எனவும் ஊடகங்களில் ஊகங்கள் வெளியாகின. இது வெளிநாடுகளில் சூசை விசுவாசிகளுக்கும் பொட்டுவின் ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பத்தையும் முறுகலையும், தோற்றுவித்தது.
 இந்த நிலையில்தான் எல்.ரீ.ரீ.. சில கெடுதி கட்டுப்பாடு முயற்சிகளை மேற்கொண்டது. சூசை, விபத்தில் சிக்கியது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒன்று செய்யப்பட்டது. கடற்புலி பற்றிய ஒளிநாடா தொடரின் 11 ஆம் இலக்க ஒளிநாடா வெளியீட்டின்போதே இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பேசும்போது சிரேஷ்ட கடற்புலி தளபதி விநாயகம் இந்த விபத்தைப் பற்றி குறிப்பிட்டார். அந்த உரையில் சூசை விரைந்து சுகமடைந்து வருவதாக குறிப்பிட்டார். சூசை வைத்தியசாலையில் இருந்தவாறே இந்த ஒளிநாடா வெளியீட்டு நிகழ்வை திட்டமிட்டதாக கூறினார். விரைவில் சூசை பூரண சுகம்பெற்று வருவார் எனவும் குறிப்பிட்டார். விநாயகம் கூறியது போலவே சில வாரங்களின் பின் செப்டெம்பர் 2007 இல் சூசை வெளியில் தோன்றினார்.
 
இராணுவ நடவடிக்கைகள்
ஜுலை 9, 1997 இல் புல்மோட்டைக்கு அண்மையில் 'MV. Cordiality' என்ற கப்பல் மீதான தாக்குதலுக்கு தலைமை தாங்கி நடத்தியதுடன்தான் விநாயகம், புலி அமைப்புகளுக்குள் அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றுக்கொண்டார். பெருமளவிலான இல்மனைற் கனியத்தை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக பனமாவில் பதியப்பட்ட சீனர்களால் செலுத்தப்படும் கப்பலை இலங்கை அரசாங்கம் ஒப்பந்த அடிப்படையில் பெற்றிருந்தது. இந்த தாக்குதல் எல்.ரீ.ரீ.. இன் அதிரடிப்படையான சிறுத்தைகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகும். கப்பலுக்கும் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்த சிறுகப்பல் அணிமீது கடற் புலிகளும் சிறுத்தைகளும் தாக்குதல் நடத்தினர். எல்.ரீ.ரீ.. , மூன்று தாக்குதல் படகுகள் சேதமாக்கப்பட்டதாகவும் ஒன்று அழிக்கப்பட்டதாகவும் அறிவித்தது.
 புலிகளின் இரண்டு பெரிய தரைத் தாக்குதல்களுக்கு எல்.ரீ.ரீ.. படையினரை கொண்டுபோய் சேர்ப்பதில் விநாயகம் முக்கிய பாத்திரம் வகித்தார்.
இதில் பிரபலமான ஒன்று  ஏப்ரல் 2000 இல் வடமராட்சி கிழக்கு கரைக்கு அப்பால் மாமுனைகுடாரப்புக்கு அண்மையில் பால்ராஜ் தலைமையிலான தாக்குதல் படையொன்றை தரையிறக்கியமை ஆகும். பால்ராஜ் அணியினர் பின்னர் தரைப்பக்கமாக நகர்ந்து, 9 வீதியில் இத்தாவில் எனும் இடத்தில் இராணுவத்தினரின் விநியோக பாதையை வரலாற்று புகழ்மிக்க ஒரு சண்டையின் பின் ஊடறுத்தனர். இதனால் ஆனையிறவு, இயக்கச்சி ஆகிய இடங்களிலிருந்த படையினர் தொடர்பற்று தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர் ஆனையிறவு, இயக்கச்சி இராணுவ முகாம்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
 அடுத்த தாக்குதல், விநாயகமூர்த்தி முரளிதரன் அல்லது 'கேணல்' கருணா தலைமையில் கிளர்ச்சியில் ஈடுபட்ட கிழக்கு மாகாண போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாகும். எல்.ரீ.ரீ.. வடக்கிலிருந்து போராளிகளை கடல் வழியாக கொண்டுபோய் பால்சேனை- வாகரை, கரை வழியேயும் திருக்கோவில் கரையிலும் தரையிறக்கியது. கடற்புலிகளின் வெற்றிகரமான கடல்வழி தரையிறக்கம், கருணாவை தோற்கடிப்பதில் பெருமளவில் உதவியது.
 மார்ச் 20, 2003இல் சீன மீன்பிடி கப்பலான “Fu yuan ya 225” மீது கடலில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் விநாயகம் என்று கூறப்படுகிறது. 15 சீனர்கள் 02 இளைஞர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். அப்போது யுத்த நிறுத்தம் அமுலில் இருந்தது. இது அப்பட்டாமன யுத்த நிறுத்த மீறுதல் ஆகும். எல்.ரீ.ரீ.. இதற்கான பொறுப்பை கூச்சமின்றி மறுத்தது.
விநாயகத்தின் இன்னுமொரு சாதனை மே 2006 இல் '“MV Pearl Cruise’’ கப்பலை பாதுகாத்துச் சென்ற கடற்படையின் படகு அணி மீது தாக்குதலை மேற்கொண்டதாகும். இந்த கப்பலில்; வடக்குக்கு கொண்டு செல்லப்பட்ட 710 படையினர் இருந்தனர். பருத்தித்துறைக்கு அப்பால் நடந்த மோதலில் கடற்படையின் 'டோறா' படகு ( P-418) அழிக்கப்பட்டது. இன்னுமொரு 'டோறா'  படகு  ( P-420) பெரிய சேதத்திற்கு உட்பட்டது.
விநாயகம் கடற்புலியில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். ஒரு சமயம் இவர் கடற்புலிகளின் தாக்குதல் நடவடிக்கை தளபதியாக இருந்தார். இவர் கடற்புலிகளின் புலனாய்வு பிரிவினரின் பொறுப்பாளராகவும் இருந்துள்ளார். அந்த நேரத்தில் பொட்டு அம்மானுடன் நன்கு ஒத்திசைந்து வேலை செய்தார். ஒரு கட்டத்தில் இவர் மேற்கு மற்றும் வடமேற்கு கரையின் கடற்புலிகளுக்கு பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த காலத்தில்தான் கடற்புலிகள், நெடுந்தீவில் வெற்றிகரமான தாக்குதல் ஒன்றை மே 24, 2007 இல் நடத்தினர். விநாயகம்தான் இந்தத் தாக்குதலை திட்டமிட்டு, இணைத்து, தலைமை தாங்கி நடத்தியவர். கரையிலிருந்து கணிசமான தூரத்திலிருந்த அந்தத் தீவில் காணப்பட்ட கடற்படை சாவடிகள் தாக்கப்பட்டன. இரண்டு விமான எதிர்ப்பு பீரங்கிகளையும் இரண்டு இயந்திர துப்பாக்கிகளையும் ஒரு ஆர்.பி.ஜீ. லோஞ்சரையும், எட்டு ரைபில்களையும் எல்.ரீ.ரீ.. நெடுந்தீவு தாக்குதலில் கைப்பற்றியது. இவற்றோடு நெடுந்தீவில் இருந்த ராடர் அலகையும் எல்.ரீ.ரீ. எடுத்துச்சென்றது.
 கடந்து வந்த பாதை
சிரேஷ்ட கடற்புலி தளபதி என்ற வகையில் இவரது இப்படியான சாதனைகள்தான், இந்தியாவில் ஒரு இரகசியமான பொறுப்பை விநாயகத்திடம் ஒப்படைக்க எல்.ரீ.ரீ.. தீர்மானிக்க காரணமாக இருந்திருக்கலாம்.
 மே, 2009 இல் அனர்த்தத்தின் பின் விநாயகம் ஐரோப்பாவில் நிலைகொண்டதாக தெரிகிறது. மேற்கத்தைய நாடொன்றில் அடைக்கலம் கேட்டபின் பேசாமல் புலனாகாத வகையில் வாழ இவர் மனங்கொள்ளவில்லை. அவர் பல எல்.ரீ.ரீ.. முன்னாள் எல்.ரீ.ரீ.. உறுப்பினர்கள் மற்றும் செயற்படுநர்களுடன் உறவுகளை ஏற்படுத்தியிருந்தார்.
 அது மட்டுமன்றி எல்.ரீ.ரீ.. புதுப்பிக்கும் பாரிய வேலையிலும் ஈடுப்பட்டார். இவர் இப்போது எல்.ரீ.ரீ..யின் எச்ச சொச்சத்தின் தலைமைக்கு உரிமை கோருகிறார். விநாயகத்தை கவர்ச்சி மையமாக வளர்த்தெடுக்க தீவிரமாக முயலும் நெடியவனுடன் விநாயகம் உறுதியான, இணைந்து போகும் உறவை வைத்திருக்கிறார். விநாயகத்தின் தீவிர போர்க்கள அனுபவமும், வெற்றிகரமான கடற்படை தளபதி என்ற ரீதியில் அவருக்கு உள்ள புகழும் ஆயுதப் போராட்டத்தை விரும்பும் வெளிநாட்டு ஆதரவாளர்களின் மனதில் இடம்பிடிக்கக்கூடிய ஒரு தோற்றப்பாட்டை கொடுப்பதற்கு பயன்படுத்தக் கூடிய சிறப்பம்சம் கொண்டவையாகும்.
தமது பதவிக்கும் சவாலாக வராத, அதேசமயம் மனம் சோர்ந்து போயுள்ள புலி செயற்படுநர்களை உஷார்படுத்தவும் தொழிற்பட வைக்கவும் கூடிய தோற்றப்பொலிவு விநாயக்துக்கும் உண்டு என்பது நெடியவனின் கருத்தாக உள்ளது. எனவே நெடியவனும் விநாயகத்தைப் புதிய தலைவராக உயர்த்தும் வகையில் செயற்படுகின்றார். நெடியவனும் விநாயகமும் வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ..யை மீண்டும் தொழிற்பட வைக்கவும் அணி திரட்டவும் முயன்று வருகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் உலகத் தமிழ் அரங்கம் என்பவற்றைக் கொண்டுள்ள முதல் வகையான எல்.ரீ.ரீ.. அல்லது எல்.ரீ.ரீ.. சார்பு அமைப்புக்கள் ஒப்பீட்டளவில் மிதவாத, வெளிப்படையான நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளபோது நெடியவன் வலையமைப்பு மற்றும் விநாயகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.. அங்கத்தவர்கள் ஆகியோரைக் கொண்ட இரண்டாம் வகையினர் படிப்படியாக 'உண்மையான எல்.ரீ.ரீ.. அல்லது முன்னாள் எல்.ரீ.ரீ..யினர் நெடியவனை விட அல்லது வேறு எவரையும் விட விநாயகத்தை விரும்பும்போது இந்த கடற்புலித் தலைவரை புதிய தலைவராக நிலை நிறுத்துவதற்கான ஆயத்தங்கள் நடந்துக்கொண்டுள்ளன.
 கூட்டு
 இதற்கு, இந்த சிரேஷ்ட கடற்புலி மறுப்பில்லை. ஆனால் தற்சமயம் அவர் பிரபலமாக விரும்பவில்லை. நெடியவனுடன் ஒரு தந்திரோபாய கூட்டில்  அவதானமாகவும் எச்சரிகையாகவும் இணைந்து புலி ஆதரவாளர்களுடனும் செயற்படுநர்களுடனும் ஊடாடுவதை விநாயகம் விரும்புகிறார். ஏற்கெனவே விநாயகம் பல்வேறு எல்.ரீ.ரீ.. ஆதரவாளர்களுடன் செயற்படுநர்களுடனும் மற்றும் முன்னாள் அங்கத்தவர்களுடனும் தொடர்புகளை வைத்திருக்கின்றார். அவர்களிடம், தான் உயிருடன் இருப்பதாகவும் பொறுப்பை எடுத்துள்ளதாகவும் கூறி வருகிறார். ' எல்லாம் முடிஞ்சு போகவில்லை' என்றும் 'கெதியாய் எதுவோ நடக்கப்போகுது' என்றும் கூறி வருகின்றார். விநாயகத்துக்கும் நெடியவனுக்கும் இடையிலான இந்த தந்திரோபாயக் கூட்டின் தாற்பரியம் பற்றியும் இதனால் தமிழ் புலம்பெயர்ந்தோர், இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் விளைவுகள் பற்றியும் இவற்றோடு சேர்ந்து வரக்கூடிய பாதுகாப்பு நிலைவரம் மீதான தாக்கம் பற்றியும் இனிவரும் கட்டுரையில் விவரமாக ஆராயப்படும்.
DBS Jeyaraj can be reached at இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
 

 
(தமிழில்: ந.கிருஷ்ணராசா)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’