..

இலியானா டெக்கோனெலி வயது 28 என்ற ஆசிரியையே இவ்வாறு கவர்ச்சியால் உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்துள்ளதாக குற்றம் விமர்சிக்கப்பட்டுள்ளார்.
இவர் கல்வியில் 3 பட்டங்களைப் பெற்றவர். ஆனால் முன்னாள் மொடல் அழகியான அவரின் ஆபாச படங்கள் ஒளிப்பதிவு அடங்கிய விடயங்களை அவர் இணையத்தளத்திற்கு அனுப்பியுள்ளார்.
அதன் பெறுபேறாக அப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் ஆத்திரமடைந்துள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு ஆசிரியையாக இருப்பதற்கு தகுதியற்ற விதத்தில் அவர் அதிக கவர்ச்சியாக இருப்பதாக பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
ஒருவர் தமது மகளை அந்த பாடசாலையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஆனால், புகழ்பெற்ற சான் கார்லோ கத்தோலிக்க உயர் பாடசாலையின் தலைமையாசிரியரும் வேறு சில பெற்றோர்களும் - குறிப்பாக தந்தையர்கள் - மேற்படி ஆசிரியைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பிராந்திய அழகுராணிப் போட்டியில் வெற்றியீட்டிய டெக்கோனெலி தேசிய ரீதியான போட்டியில் தோல்வியுற்றபின் ஆசிரியையாக பணியாற்றத் தொடங்கினார்.
தாய் ஒருவர் அந்த தலைமையாசிரியருக்கு அந்த ஆசிரியை மிகவும் கவர்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து இந்த சர்ச்சை ஆரம்பமாகியது.
இவ்விவகாரம் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கோனியின் குடும்பத்திற்குச் சொந்தமான பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக வெளியாகியது.
இது தொடர்பாக டெக்கோனெலி கூறுகையில், "நான் இளமைக்காலத்தில் அதிக அழகுடன் இருந்தபோது, மொடலாக பணியாற்றினேன். கடந்த 3 வருடங்களாக ஆசிரியையாக பணியாற்றுகிறேன். நான் எந்தப் பிரச்சினையிலும் சம்பந்தப்படவில்லை. பாடசாலை நிர்வாகம் எனக்கு ஆதரவளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’