வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 29 செப்டம்பர், 2010

சரத் பொன்சேகா உறுப்புரிமை ரத்து : மனுவை ஏற்க மறுப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் உறுப்புரிமையை ரத்து செய்யக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
.ஹப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்த் மோகன்தாஸ் என்பவர் மேன்முறையீட்டு நீதிமன்றில் இது தொடர்பாகத் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
எனினும் மனுவில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனத் தேர்தல்கள் ஆணையாளர் சார்பாக முன்னிலையான அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர், மனுதாரரின் சட்டத்தரணி, குறித்த மனுவை மீளப்பெறுவதற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.
அதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், சரத் பொன்சேகாவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்து செய்வது தொடர்பாக எதிர்காலத்தில் மனு தாக்கல் செய்வதற்கு தடையேதும் கிடையாது என அறிவித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’