வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

தில்லியில் சுற்றுலாப் பயணிகள் சுடப்பட்டனர்

ந்தியத் தலைநகர் தில்லியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் தாக்கியுள்ளனர்.
துப்பாக்கிதாரிகளின் தாக்குதலில் தாய்வானிலிருந்து வந்திருந்த இருபது, இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவர் காயடைந்துள்ளனர்.

இவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
தில்லியின் பிரபலப் பள்ளிவாசலான ஜமா மஸ்ஜித்தின் வெளியே இந்த சம்பவம் நடந்துள்ளது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தில்லியில் இன்னும் இரண்டே வாரங்களில் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இத்தாக்குதல் நடந்திருப்பது, போட்டிகள் தொடர்பான பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவத்தால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என தில்லியின் முதலமைச்சர் ஷீலா தீட்சித் கேட்டுக்கொண்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’