வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

ஐ.தே.க தலைமைப் பதவியிலிருந்து நீங்கக்கோரி சத்தியாக்கிரகப் போரட்டம் -தயாசிறி

க்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலிருந்து ரணில் விலக வேண்டும் எனக் கோரி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்
.அவர் மேலும் தெரிவிக்கையில், “சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டத்தின் முதல் கட்டமாக கோட்டை சிறிகொத்தையில் உள்ள தலைமையகத்தில் ஆரம்பிக்கவுள்ளது. மாகாண சபை மற்றும் பிரதேச உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். தலைமைத்துவம் தொடர்பில் தெளிவான தீர்மானம் எடுக்கப்படாவிடில் இதனைவிட பலமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார். _

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’