வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 30 செப்டம்பர், 2010

கடலில் நீந்தி கின்னஸ் சாதனையை நிலைநாட்டும் முயற்சியில் இளைஞன்

காலி, எல்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதான சமன் உடுகமசூரிய என்பவர் நாட்டின் பல பாகங்களில் உள்ள கடற்கரைகளில் நீந்தி கின்னஸ் சாதனையை நிலை நாட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்
.இவர் கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி காலை கொழும்பு கடற்கரையிலிருந்து பயணத்தை ஆரம்பித்து அம்பாந்தோட்டை, திருகோணமலை, யாழ்ப்பாணம், பூநகரி, ஆகிய பகுதிகளுக்கு கடல் மார்க்கமாக சென்று இன்று மாலை மன்னார் பிரதான பாலத்தை வந்தடைந்தார்.
இவரை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.நிக்கொலஸ்பிள்ளை மற்றும் மன்னார் பிரதேச செயலாளர் ஸ்ரான்லி டிமெல் ஆகியோர் வரவேற்றனர். இவர் சிலாபத்துரை கடல் மார்க்கத்தினூடாக புத்தளம், கற்பிட்டி, நீர்கொழும்பு சென்று கொழும்பை சென்றடைவார் என தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’