வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 செப்டம்பர், 2010

பிரதமரின் கவனத்துக்கு குக்குலுகலைச் சம்பவம் : சதாசிவம்

நிவத்திகலை, குக்குலுகலை தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை தொடர்பாக பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
.இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை தால குக்குலுகலை தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தினால் இந்தத் தோட்டத்தை விட்டு அச்சத்தினால் இடம் பெயர்ந்துள்ள தமிழ்க் குடும்பங்கள் தொடர்பில் பிரதமரும் பதில் பாதுகாப்பு அமைச்சருமான தி.மு.ஜயரட்னவின் கவனத்திற்குத் தான் கொண்டு வந்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணித் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
"குக்குலுகலை தோட்டத்தில் இடம் பெற்ற சம்பவமொன்றைத் தொடர்ந்து அந்தத் தோட்டத்தில் வாழும் தமிழர்களின் உடைமைகளுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை தொடர்பிலும் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.
இதனைத் தொடர்ந்து இந்த விடயம்குறித்து உரிய கவனம் செலுத்தவுள்ளதாக பிரதமர் என்னிடம் உறுதியளித்துள்ளார்" என்றும் சதாசிவம் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’