வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

இருபத்தொரு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற அச்சுவேலி வீரமாகாளியம்மன் கும்பாபிஷேகம். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பங்குகொண்டார்.

அச்சுவேலி தெற்கு அருள்மிகு வீரமாகாளி அம்மாள் தேவஸ்தான குடமுழுக்கும் கும்பாபிஷேகமும் இன்றையதினம் (23) வெகுசிறப்பாக இடம்பெற்றன.புகைப்படம் இணைப்பு
மேற்படி தேவஸ்தான கும்பாபிஷேகம் இருபத்தொரு வருடங்களின் பின்னர் இடம்பெற்ற நிலையில் பரிபாலன சபையினரின் அழைப்பின்பேரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெருவிழாவில் பங்குகொண்டார். இன்றுபகல் தேவஸ்தானத்திற்கு வருகை தந்த அமைச்சரவர்களை பரிபாலன சபை நிர்வாகிகளான வர்ணதேவன் ஐயா மகாலிங்கசிவம் ஐயா ஆகியோர் பக்திபூர்வமாக வரவேற்றனர். அமைச்சர் அவர்கள் ஏற்கனவே ஆலய நிர்வாகத்தினரின் வேண்டுகோளின் பேரில் தேவஸ்தான புனரமைப்பிற்கெனவும் உற்சவத்திற்காகவும் நிதியுதவி வழங்கியிருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

தேவஸ்தான பிரதம சிவாச்சாரியார் கமல்ராஜ் குருக்கள் தலைமையில் இன்று காலை முதல் ஆரம்பமாகி இடம்பெற்ற கும்பாபிஷேக பெருவிழாவில் பெருந்தொகையான அடியவர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’