வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 28 ஆகஸ்ட், 2010

யாழில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் தாய் ஒருவர் காயம்

யாழ் கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 42 வயதான தாய் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
.யாழ் நகர பாடசாலையில் கல்வி கற்கும் இந்தப் பெண்ணின் சிறிய மகள் வீதியில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்துச் சென்று வீட்டின் அடுப்பில் போட்டதாகவும் அந்தப் பொருள் வெடித்ததனால் சிவரட்ணேஸ்வரி என்பவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது யுத்தகாலத்தில் பண்ணைப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளாக இருக்கலாம் எனத் தெரிவிக்கும் பொலிசார் மேலதிக விசாரணைகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’