அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து வாபஸ் பெறும் தீர்மானத்தை தாம் மீளாய்வு செய்ய வேண்டுமானால் அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் 17 ஆவது திருத்தச்சட்டம் ஆகியன குறித்தத யோசனைகளை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத் தரப்புக்கு இழுத்தெடுத்ததன் காரணமாக அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளிலிருந்து தாம் வாபஸ் பெறுவதாக ஐ.தே.க. நேற்று கூறியிருந்தது.
இந்நிலையில், அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தம் குறித்து பேசினாலும் இதுவரை அது தொடர்பான யோசனைகளை வெளியிடவில்லை என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா டெய்லி மிரர் இணையத்தளத்திடம் கூறியுள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’