வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

490 பேர் கொண்ட 'சன் ஸீ' கப்பலில் கனேடிய கடற்படையினர் ஏறினர்

490இலங்கை அகதிகளுடன் கனடாவை நோக்கிச் சென்ற 'எம்.வி. சன் ஸீ' எனும் கப்பலில் கனேடிய கடற்படையினர் ஏறியுள்ளனர்
.கனேடிய கடற்படைக் கப்பலான எச்.எம்.சி.எஸ். வின்னிபெக், எம்.வி. சன் ஸீ கப்பலுடன் தொடர்பை ஏற்படுத்தியதாகவும் இறுதியில் கப்பலில் அகதிகள் இருப்பதாக சன் ஸீ கப்பல் பிரகடணப்படுத்தியதாகவும் கனேடிய பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் வியாழனன்று அறிவித்தார்.
"ஆட்கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் உட்பட அகதி அந்தஸ்து கோரும் 490 பேரைக் கொண்ட கப்பல் எமது நீர்ப்பரப்பை அடைந்துள்ளது. இது குறித்து கனேடிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும்" என அவர் கூறியுள்ளார்.
இக்கப்பல் வான்கூவர் தீவுக்கருவில் மெதுவாக பயணம் செய்துகொண்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’