வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 ஜூலை, 2010

நடிகை ரஞ்சிதா ஒரு நேர்மையான, பணிவான பக்தை : நித்யானந்தா

நடிகை ரஞ்சிதா நேர்மையான மற்றும் பணிவான ஒரு பக்தை என நித்யானந்தா தெரிவித்துள்ளார். பாலியல் சர்ச்சை தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ள நித்யானந்தா இதுவரை நடிகை ரஞ்சிதா குறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், இணையதளம் ஒன்றில் பேசிய அவர், பாலியல் சர்ச்சை குறித்த வீடியோ வெளிவந்த போது, அதுகுறித்து தான் மனவேதனை அடையவில்லை எனவும், தனது பக்தர்கள் குறிப்பாக நடிகை ரஞ்சிதா குறித்து தான் மிகவும் மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
ரஞ்சிதா நேர்மையான மற்றும் பணிவான ஒரு பக்தை என தெரிவித்த நித்யானந்தா, ரஞ்சிதா தனது குடும்பத்தினரால் மிகவும் மன வேதனை அடைந்திருந்ததாக தெரிவித்தார். மக்கள் யாராவது என்னை தாக்க வேண்டும் என நினைத்தால், அல்லது பழிவாங்க வேண்டும் என நினைத்தால் அதை நேரில் வந்து செய்து கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’