கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் நேற்று செவ்வாய்க்கிழமை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு ஐ.நா. பிரதிநிதியொருவரால் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ஸ செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
லஞ்சம் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகவும் அமைச்சர் விமல் கூறினார்.
எனினும் இது குறித்து டெய்லிமிரர் இணையத்தளம் பொலிஸாரிடம் தொடர்புகொண்டபோது அவ்வாறான குற்றச்சாட்டு எதுவும் இருக்குமானால் குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் புகாரிடலாம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை தொடர்பான தனது ஆலோசனைக் குழு நியமனத்தை மீளாய்வு செய்யத்தவறினால் தேசிய சுதந்திர முன்னணி நாடடெங்கிலும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தும் எனவும் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’