வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 27 ஜூலை, 2010

முரளிதரன் தமிழ்ப் புலி! பாக். பத்திரிகை வர்ணிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 அதிகபடியான விக்கெட் டுக்களை வீழ்த்தியவர் என்கிற சர்வதேச சாதனையை நிலை நாட்டியிருக்கும் இலங்கையின் உலகப் புகழ் வாய்ந்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தமிழ்ப் புலி என்று வர்ணித்து பாகிஸ்தானின் பிரபல ஆங்கில தினசரிப் பத்திரிகை களில் ஒன்றான த ரைம்ஸ் நேற்று ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. அந்த ஆசிரியர் தலையங்கத்தில் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு,
டெஸட் கிரிக்கெட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்ளும் முரளியின் தீர்மா னத்தை ஒரு யுகத்தின் முடிவாக மாத்திரமே வர்ணிக்க வேண்டியுள்ளது.கிரிக்கெட் வரலாற்றில் வலது கையால் மிகவும் நுட்பமான முறையில் சுழல் பந்து வீசக் கூடிய உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பெயர் குறிப்பிடத்தக்கவர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக் கெட்டுக்களையும் ஒரு நாள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் 515 விக்கெட்டுக்களை யும் பெற்று அதிகூடிய விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய சாதனை வீரராக வரலாற்றில் முரளிதரன் என்றென்றும் நினைவுகூரப் படுவார். அவர் தமிழ்ப்புலி என அப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’