வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 14 ஜூன், 2010

படகு கவிழ்ந்து பயணிகள் பலி

இந்தியாவில் கங்கை நதியில் பயணிகள் படகு ஒன்று கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த இருபத்து ஐந்து பேரின் உடல்களை ஆற்றிலிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.
உத்திர பிரதேச மாநிலம் பால்லியா நகரருகே ஒரு கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்கையில் அப்படகு கவிழ்ந்தது.
30 பேர் வரைதான் பயணிகள் ஏறலாம் என்கிற இந்தப் படகில், இரு மடங்கு கூடுதலான பயணிகள் ஏறிச் சென்றிருந்தனர் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
பயணிகளில் நிறைய சிறார்களும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பதினேழு பேர் நீந்தி உயிர்பிழைத்துள்ளனர் என்றாலும், மேலும் பதினேழு பேரின் கதி என்ன என்பது இன்னும் தெரியவரவில்லை.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’