வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 ஜூன், 2010

'இராணுவச் செலவில் சிறு குறைப்பு'

இலங்கை வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி இந்த வருடம் 4 வீதத்தால் மாத்திரம் குறைந்துள்ள போதிலும், அதில் தற்போதைய நிலையில் மேலும் குறைப்பை எதிர்பார்க்க முடியாது என்று இலங்கை பொருளாதார ஆய்வாளரான முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா தெரிவித்துள்ளார்.
இந்த வரவு செலவுத்திட்டத்தில் துண்டு விழும் தொகை கூட கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சற்றுக் குறைந்துள்ளதாகவும், சுகாதாரம், கல்வி போன்றவற்றுக்கான ஒதுக்கீடுகள் சற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பாதுகாப்புக்கான ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை போர் முடிந்து விட்டதால், பாதுகாப்புத்துறை முதலீட்டுச் செலவுகள் சற்றுக் குறைந்தாலும், நடைமுறைச் செலவுகள் குறையவில்லை என்பதால், அதற்கான ஒதுக்கீட்டில் உடனடியாக அதிக குறைப்பை எதிர்ப்பார்க்க முடியாது என்றும் சர்வானந்தா கூறினார்.
அதேவேளை, வடக்கு கிழக்கு பகுதிகளில் நிலையான முகாம்களை அமைக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதால், பாதுகாப்புத்துறை முதலீட்டுச் செலவுகளும் உடனடியாக பெரிய அளவில் குறையும் வாய்ப்பில்லை என்றும் அவர் கூறுகிறார்.
வடக்கு, கிடக்கு மீள் குடியேற்றம் தொடர்பில் நேரடியாக ஒதுக்கப்படும் நிதி கடந்த வருடத்தை விட, இந்த வருடம் குறைக்கப்பட்டிருப்பதாக கூறும் சர்வானந்தா அவர்கள், ஆனால் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் பொதுவாக கொடையாளிகளின் உதவிகளின் மூலம் நடத்தப்படுவதால், அது வரவு செலவுத்திட்டத்தில் பிரதிபலிப்பதில்லை என்றும் கூறினார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’