வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 ஜூன், 2010

புனர்வாழ்வளிக்கப்படும் 53 இளம் ஜோடிகள் இன்று திருமண பந்தத்தில் இணைந்தனர்

புனர்வாழ்வு முகாம்களில் தற்போது பயற்சி பெற்று வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் பெண் மற்றும் ஆண் போராளிகளின் 53 இளம் ஜோடிகள் இன்று காலை திருமண பந்தத்தில் இணைந்துகொண்டனர்.
இந்த திருமண வைபவம் வவுனியா, பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் நடைபெற்றது. அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் இந்திய நடிகர் விவேக் ஒப்ராய், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உட்பட அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்த இந்த இளம் ஜோடிகள், அவர்களுகென அமைக்கப்பட்டுள்ள விசேட கிராமம் ஒன்றில் குடியேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’