வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

சீனாவில் குழந்தைகளைக் கொலை செய்யும் மன நோயாளிகள்


சீனாவின் பீஜிங் நகரில் அமைந்துள்ள சிறுவர் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து நபரொருவர் நடத்திய தாக்குதலில் 7 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட மாணவர்கள் அனைவரும் ஆறு வயதிற்கும் குறைவானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலை நடத்திய Wu Huanming தனது வீட்டிற்குத் திரும்பித் தற்கொலை செய்து கொண்டு விட்டதாகவும் இவர் ஒரு மனநோயாளி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2 மாத காலத்தில் சீனாவில் பாடசாலைகளின் மீது இது போன்ற 5 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’