வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 மே, 2010

பட்டப்பகலில் வீடுடைத்துத் திருட்டு!

வீட்டில் எவரும் இல்லாத சமயம் பார்த்து பட்டப்பகலில் ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்ற திருடன் அலுமாரியில் பாதுகாப்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த சுமார் 7 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் 15 ஆயிரம் ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளான்.

இத்துணிகரமான திருட்டு மானிப்பாய் லோட்டன் வீதியிலுள்ள விஜயகாந்த் என்பவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
ஆசிரியர்களாகக் கடமையாற்றும் கணவனும் மனைவியும் கடமைக்குச் சென்ற சமயம் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய திருடன் வீட்டினுள் சென்று அறையின் கதவை உடைத்து அங்குள்ள அலுமாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும் பணத்தையும் திருடிச் சென்றுள்ளான்.
இத் திருட்டுச் சம்பந்தமாக மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’