வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 மே, 2010

மண்டைதீவு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!


மண்டைதீவு பகுதியில் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகள் காரணமாக அப்பகுதி மக்கள் பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருவதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலுக்கு முன்பதாக அப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் அவர்கள் மேற்படி விடயங்களை நேரடியாகப் பார்வையிட்டிருந்தார்.
பின்னர் இவ்விடயங்கள் தொடர்பில் கடற்படை உயரதிகாரிகளுடன் கலந்துரையாடியதற்கு இணங்க தற்போது மண்டைதீவு கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இறங்குதுறை பொதுமக்களின் பாவனைக்காக விடப்பட்டுள்ள நிலையில் ஏனைய அடிப்படைப் பிரச்சினைகள் கூடிய விரைவில் தீர்க்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’