வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 17 மே, 2010

யுத்த வெற்றியின் முதலாம் ஆண்டு விழா மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு

தற்போதுகாணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் வியாழக்கிழமை கொண்டாடவிருந்த யுத்த வெற்றி விழா மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேசிய பாதுகாப்பிற்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் முதலாவது ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்தன.
இந்தக் கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு, காலி முகத்திடலில் நடத்த ஏற்பாடாகியிருந்தது.
இருப்பினும் தற்போது நிலவி வரும் காலநிலை காரணமாக யுத்த வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்துவதில் அரசாங்கம் சிக்கல் நிலையினை எதிர்நோக்கியுள்ளது.
இந்நிலையிலேயே யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டத்தினை மறுஅறிவித்தல் வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’