வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 மே, 2010

சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் இலங்கை வாலிபர்

புதிய சட்டசபை கட்டிடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் இலங்கை வாலிபர் என்று தெரிய வந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் புதிய சட்டசபை வளாகத்தையும், சென்டிரல் ரயில் நிலையத்தையும் மனித வெடிகுண்டு மூலம் தாக்குவோம் என்றும், அது முடியாவிட்டால் வான்வெளி தாக்குதல் நடத்துவோம் என்றும் மிரட்டினார்.
அவர் இலங்கை தமிழில் பேசியதால் இலங்கையை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் போனில் பேசிய நபர் ஸ்பெயின் நாட்டிலிருந்து பேசியது கண்டறியப்பட்டது.
அவர் பேசிய எண்ணை வைத்து அவர் யார் என அடையாளம் காணும் பணியில் ஸ்பெயின் நாட்டு தூதரக உதவியை மத்திய அரசு மூலம் தமிழக போலீசார் கோரியுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’