வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 16 மே, 2010

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் 110 உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்றம்


வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 110 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்குள்ளேயே கடமையாற்றுவதற்காக பணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த இடமாற்றம் தொடர்பில் இணையத்தளம் பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடியிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, இது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் இது ஒரு உள்ளக ரீதியான இடமாற்றமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி வெற்றிபெறுவதற்கு வாழைச்சேனை பொலிஸார் சாதகமாக செயற்படவில்லை என்பதே இந்த இடமாற்றத்திற்கான பிரதான காரணம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாகவே, முன்னாள் அமைச்சர் அமீர் அலியின் தோல்விக்குக் காரணமாக செயற்பட்ட அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி உடன் இணையத்தளம் பலமுறை தொடர்பு கொள்ள முயறசித்த போதும் அது பலனளிக்கவில்லை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’