வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 ஏப்ரல், 2010

மக்களை ஐக்கியப்படுத்தும் வகையில் புதுவருடப் பண்டிகை அமைய வேண்டும் புத்தாண்டுச் செய்தியில் ஜனாதிபதி



தாய்நாடு ஐக்கியப்படுத் தப்பட்ட பின்னர் இணக்கமான மற்றும் திருப்தி யான நிலையில் கொண்டாடப்படும் முதலாவது புது வருடம் இதுவாகும். இது போன்ற புதுவரு டப் பண்டிகைகள் எமது மக்களை இதயத் தாலும், மனதாலும் மேலும் ஐக்கியப்படுத் தும் வகையில் அமையவேண்டும் என்பது எனது பெருவிருப்பமாகும்.
சிங்களவர்களா லும், தமிழர்களாலும் ஒரே வகையில் கொண்டாடப்படும் புதுவருடக் கொண் டாட்டங்கள் எமக்கிடையிலான உறவு களை அங்கீகரிப்பதற்கு மிகவும் பொருத் தமானவையாகும். எமது நாட்டு மக் களிடம் உள்ள பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் பலமான கலாசார பாரம் பரியங்களின் தொடர்ச்சியாகவே இதனைக் காணமுடிகின்றது.''
 இப்படி ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தாம் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:
மக்களிடம் புதுவருடத்தின் மகிழ்ச்சி யையும்  அர்த்தத்தையும் கொண்டு வருவ தற்குத் தேவையான அனைத்து நடவடிக் கைகளையும் அரசு செய்துள்ளது. விவசாய அபிவிருத்தி மற்றும் வாழ்க்கை நெறி முறைகள் மூலம் நாட்டுக்கு சுபீட்சத்தைக் கொண்டுவர நாம் ஆவன செய்துள்ளோம்.
எதிர்கால பரம்பரையான எமது பிள்ளை
களே புதுவருடத்தின் உண்மையான தாற்பரியத்தைப் பெரிதும் உணர்ந்துகொள்ள வேண்டியவர்களாவர்.
ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டு வரும் சிறந்த விழுமியங்கள் மற்றும் பாரம்பரியங்களை அவர்களுக்குப் போதிக்க வேண்டியது ஒரு தேசம் என்ற வகையில் எமது பொறுப்பாகும். அத்துடன் எமது நாட்டை வளப்படுத்தியுள்ள கலாசார மரபுரிமைகளையும் அவர்களிடம் கையளிக்க வேண்டும்.
ஒவ்வொரு குடியிருப்பும் புதுவருட பாரம்பரியங்களை எதிர்காலத்தின் சுபமான ஆரம்பத்துக்கான நம்பிக்கையுடன் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது விருப்பமாகும்.
எமது நாட்டின் ஒற்றுமையையும் பெருமையையும் பிரதிபலிக்கும் இந்த சிங்கள  தமிழ் புதுவருடம் மகிழ்ச்சி, சமாதானம், பகிர்ந்துகொள்ளல் மற்றும் திருப்தியுறுதல் போன்ற உணர்வுடன் அனைவராலும் கொண்டாடப்பட்டு எம்மை எதிர்கால சுபீட்சத்துக்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்.  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’