கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்களை மறந்துவிடவே இலங்கை விரும்புவதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்தார்.
இலங்கையின் தந்திரோபாயங்கள் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் ஆகியவற்றை உலகநாடுகள் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பழையவற்றை மறந்து புதிய ஓர் சகாப்தத்தை நோக்கிச் செல்ல வேண்டிய காலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாழும் இலங்கையர்கள் ஒரே சமூகமாக அணி திரள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’