
ஒளிமயமானதோர் எதிர்காலத்தை நோக்கி எமது மக்கள் அணிதிரண்டு வரும் சந்தர்ப்பத்தில் மேற்படி சம்பவங்கள் எமது மக்களை மீண்டும் கடந்த கால நிலை குறித்த ஞாபகங்களுக்கும் அச்சத்திற்கும் இட்டுச் செல்வதாக அமைந்து வருவதால் இவ்வாறான சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்நிலையில் பொதுமக்களும் முன்வந்து பொலிஸாருக்கு உதவி இவ்வாறான சம்பவங்கள் வளராமல் இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடத்தப்படுகின்ற நபர்கள் என்ன காரணங்களுக்காக கடத்தப்படுகின்றார்கள் என்ற விடயம் உறுதியாக தெரியவராத நிலையில் மக்கள் அனைவரும் விழிப்பாக இருப்பதன் மூலமும் பொலிஸாருக்கு தங்களது ஒத்துழைப்புக்களை வழங்குவதன் மூலமும் இவ்வாறான கொடிய சம்பவங்களை எமது சமூகத்தில் வளர விடாது தடுக்க முடியும் என்றும் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’