வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

75 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.


கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய, “மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம்” நெக்டெப் வேலைத்திட்டத்தின் கீழ் 75மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் மீள் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு எதிர்வரும் 01.05.2010 கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்தரகாந்தனின் பிரதான பங்குபற்லுடன் மட்டக்களப்பு மாநகர முதல்வர் திருமதி.சிவகீத்தா பிரபாகரன் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு அரச அதிபர் சு.அருமைநாயகம், நெக்டெப் திட்ட கிழக்கு மாகாண பணிப்பாளர் திரு.ளு.ஆ.குறூஸ், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி.க.பத்மராஜா ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகச் செயலாளர் ஆ.தேவராஜன் தெரிவித்துள்ளார்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’