வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 ஏப்ரல், 2010

தந்தை செல்வாவின் 33வது நினைவு நாள்

தந்தை செல்வாவின் 33ஆவது நினைவு நாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ளன. வவுனியாவில் நடைபெறவுள்ள நிகழ்வினை தந்தை செல்வா அறங்காவலர் சபையினர் ஒழுங்கு செய்துள்ளதாக சபையின் தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா இறம்பைக்குளம் குருமன்காடு காளிகோவில், வேப்பங்குளம் கிறிஸ்தவ ஆயலம் ஆகியவற்றில் இன்று காலை, நண்பகல் மற்றும் மாலை வேளைகளில் வழிபாடுகள் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காலை 9மணிக்கு வவுனியா மணிக்கூட்டுச் சந்தியில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வும் பிற்பகல் 3.30 மணிக்கு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நினைவுக் கூட்டமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உட்பட்ட தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கு கொள்வர் என தந்தை செல்வா அறங்காவலர் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதே வேளை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபி அமைந்துள்ள முன்றலிலும் மன்னார், திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகள் நடைபெறும் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’