வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

11 ஆவது ஆசிய பாடகர்ளுக்கான போட்டி சீனாவில்

11 ஆவது ஆசிய புதிய பாடகர்களுக்கான போட்டி வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி தொடக்கம் மே 7ஆம் திகதி வரை சீனாவில் இடம்பெறவுள்ளது.இதில் இலங்கையை சேர்ந்த இளம் பாடகர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

திறமைமிக்க இளம் பாடகி உமாரியா சிங்கவன்ச சோலோ போட்டியிலும் மற்றும் குழு போட்டியில் கனிஷ்க அத்துலத்முதலி, சஹத்திரி ஹெரத், நுவான் ,சந்துன் ரங்கே ஆகியோர் பங்குபற்ற உள்ளனர். அரு ஸ்ரீ ஆட்ஸ் தியெட்டர் முகாமையாளர் திருமதி அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட பல இளம் பாடகர்கள் இந்த ஆசிய பாடகர்ளுக்கான போட்டியில் பங்குபற்றி பிரபல்யம் அடைந்துள்ளனர்.
அந்த வகையில் உலகலாவிய ரீதியில் சிறந்து விளங்கும் இலங்கை சகோதர பாடகர்களான பாத்ய சந்தோஷ் ஆகியோர் இவ்வாறான ஆசிய புதிய பாடகர்களுக்கான போட்டியில் பங்கு கொண்டு விருதுகளை பெற்று சிறந்த பாடகர்களாக திகழ்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு இலங்கை பாடகர்கள் உலகலாவிய ரீதியில் ஒரு அங்கீகாரத்தை பெற இந்த ஆசிய பாடகர்ளுக்கான போட்டி ஒரு பொன்னான வாய்ப்பாக அமைகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’