வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 மார்ச், 2010

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் பிரான்ஸ் அறைகூவல்விடுகின்றது!

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மு;னனணி இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சகல சமூகப்பிரிவினரதும் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி. இந்த இலட்சியங்களுக்காக இடையறாது பாடுபடும் கட்சி. எமது தமிழ் சமூகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தியாகங்களை செய்த கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் யதார்த்த பூர்வமான தீர்வினை முன்வைத்து வலியுறுத்தி, செயற்பட்டு வரும் கட்சி. இந்தியாவுடன் இடையறாத நட்புறவை பேணி வரும் கட்சி.

அன்பிற்கினிய எம் உறவுகளே!

இருபது ஆண்டுகளின் பின்னர் நமது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மக்கள் மத்தியில் நேரடியாக, பகிரங்கமாகச் செயற்படக்கூடிய வாய்ப்பு கிட்டியுள்ளது. வரலாறு எம்மை விடுதலை செய்துள்ளது. சாம்பல் மேட்டிலிருந்து எழுந்து நிற்கும், எமது கட்சியைப் பலப்படுத்துவதும், வளர்த்தெடுப்பதும் நமது கடமையாகும்.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை மு;னனணி இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சகல சமூகப்பிரிவினரதும் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி. இந்த இலட்சியங்களுக்காக இடையறாது பாடுபடும் கட்சி. எமது தமிழ் சமூகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக தியாகங்களை செய்த கட்சி தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் யதார்த்த பூர்வமான தீர்வினை முன்வைத்து வலியுறுத்தி, செயற்பட்டு வரும் கட்சி. இந்தியாவுடன் இடையறாத நட்புறவை பேணி வரும் கட்சி

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆக பதிவு பெற்ற எமது கட்சி போட்டியிடுகின்றது. யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய இரு இடங்களிலும் எமது கட்சியின் சின்னமான மெழுகுதிரி சின்னத்திலும், வன்னியில் புளொட் அமைப்பின் சின்னமாகிய நங்கூரம் சின்னத்திலும் கூட்டாக இணைந்து போட்டியிடுகின்றது.

எமது கட்சியை ஆதரித்து பலப்படுத்துவது நம் அனைவரதும் உரிமையும், கடமையுமாகும்.

அன்பிற்கினிய உறவுகளே !

எமது கட்சி எதிhவரும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு நாம் உறுதியுடன் பங்களிக்க வேண்டும். புதிய அத்தியாயம் ஒன்றிற்கு வழி சமைக்க வேண்டும்.

அன்புடன்

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் பிரான்ஸ்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’