வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 10 மார்ச், 2010

பாகிஸ்தானில் சர்வதேச அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல் : ஐவர் பலி

பாகிஸ்தானிலுள்ள 'வேர்ல்ட் விஷன்' எனும் நிவாரண உதவிகளுக்கான சர்வதேச அமைப்பு அலுவலகம் மீது துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலில் கையெறிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. பலியானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. 

கடந்த சில ஆண்டுகளாகவே வடமேற்குப் பாகிஸ்தானில் தலிபான் மற்றும் பிற பயங்கரவாத இயக்கங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தற்போது நடந்திருக்கும் தாக்குதலும் அவர்களே நடத்தியிருக்கக் கூடும் என்றே கருதப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’