வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 மார்ச், 2010

பொன்சேகா குறித்த நீதிமன்ற விசாரணைகளுக்கு ஊடகங்களுக்கு அனுமதியில்லை : இராணுவப் பேச்சாளர்


ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்பான இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக விரைவில் இராணுவ நீதிமன்றில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவ நீதிமன்றங்களினால் நடத்தப்படும் விசாரணைகளின் போது, இராணுவ சட்டத்தின் அடிப்படையில் ஊடகங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, ஜெனரல் சரத் பொன்சேகா குறித்த இராணுவ நீதிமன்ற விசாரணைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு தகவல்கள் வழங்கப்பட மாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’