வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 29 மார்ச், 2010

கொக்குவில் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்

நாளுக்கு நாள் மட்டக்களப்பிலே தேர்தல் பிரசாரங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழ் கட்சிகள் மட்டுமல்லாது பேரினவாதக் கட்சிகளும் தமது தமது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கட்சி தமிழர்களின் வாக்குகளை வேட்டையாடி தமிழர்களின் அரசியல் எதிர் காலத்தை குழி தோண்டிப் புதைக்கும் நடவடிக்கையிலே ஈடுபட்டு வருகின்றன.
இதற்க்கு சில தமிழர்களும் பணத்துக்கும் சுக போகங்களுக்கும் தமிழினத்தை விற்கத் துணிந்து இருப்பதுதான் கவலைக் குரிய விடயம்.
எதிர்க் கட்சி உட்பட சிங்கள பேரின வாத கட்சிகளும், அரசாங்கங்களும் தமிழர்களுக்கு செய்த துரோகங்களை தமிழர்கள் மறந்து விடவில்லை. ஜனாதிபதித் தேர்தலிலே தமிழர்கள் ஆளும் கட்சிக்கு நல்ல பாடம் புகட்டியதுபோல் இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் நல்ல பாடம் புகட்ட இருக்கின்றனர்.
இன்றொரு கொள்கை நாளை ஒரு கொள்கை என்று இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீண்டும் வீர வசனங்களை பேச ஆரம்பித்து விட்டனர். வீர வசனம் பேசியே தமிழர்களை உசுப்பேத்தி தமிழர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் இவர்கள் என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர். ஆனாலும் வீர வசனங்கள் பேசியே மக்களை மாற்றி தன்பக்கம் இழுத்து விடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டு இருக்கின்றனர்.
வடக்கிலே இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சிரேஸ்ர உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பிலே தேர்தல் பிரச்சாரங்களை நடாத்தி வருகின்றனர். இவர்களுக்கு இப்போதுதான் மட்டக்களப்பு மக்கள் மீது அக்கறை வந்திருக்கின்றதா? இவர்கள் மட்டக்களப்பு தமிழர்களுக்கு என்ன செய்திருக்கின்றார்கள் என்று மக்கள் கேட்கின்றனர்.
இன்று மக்கள் மத்தியிலே இவர்களுக்கு ஆதரவு இல்லை. பல கிராமங்களிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களால் துரத்தி அடிக்கப் பட்டிருக்கின்றனர். அண்மையில் கொக்குவில் கிராம மக்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்விரட்டி அடிக்கப்பட்டிருக்கின்றனர்.
கிழக்கில் இடம்பெற்ற வன்னிப் புலிகளின் படுகொலைகளுக்கு சூத்திரதாரிகளாக இருந்து செயற்பட்ட ரெலோ பிரசன்னா எனும் நபர் மட்டக்களப்பில் போட்டியிடுகின்றார். இன்று ஏற்பட்டுள்ள அமைதிநிலையையும் ஜனநாயக இடைவெளியையும் பயன்படுத்தி புலிகளது விசுவாசிகள் கூட்டமைப்பின் ஊடாக ஜனநாயக வேசமிட்டு உலாவர ஆரமிபித்துள்ளனர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டிடியிடும் பிரசன்னா கடந்த காலங்களில் பொட்டம்மானின் நேரடி உளவாளியாக இருந்து செயற்பட்டவர். ராஜன் சத்திய மூர்த்தி, கிங்ஸ்லி ராஜநாயகம் போன்ற கிழக்கின் தலைமைகளை கொன்றொழிக்க சூத்திரதாரியாக செயற்பட்டவர் இவரே.
அது மட்டுமல்ல பல பொதுமக்களை வன்னிப் புலிகள் கொன்றொழிக்கவும் காரணமான பிரசன்னா கடந்த காலங்களில் மட்டக்ளப்பு மக்களால் துரத்தி அடிக்கப்பட்டவர். இன்று தேர்தலைப் பயன்படுத்தி மட்டக்களப்பில் கால் பதித்துள்ளார்.
அதன் காராணமாக நேற்று இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமைப்பினரின் பிரச்சார ஒழுங்குகளை கொக்குவில், திராய்மடு போன்ற மட்டக்களப்பு நகரையண்டிய கிராமத்து மக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்குமுகமாக கிளர்ந்தெழுந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு பாதிவழியிலேயே பிரசன்னா தனது காரைத் திருப்பிக் கொண்டு ஓடியதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’