.jpg)
நபரங்பூர்: ஒரிசாவில் பள்ளி மாணவிகள் நான்கு பேரை கற்பழித்த தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒரிசா மாநிலம், புவனேஸ்வரில் இருந்து 550 கி.மீ தொலைவில் கோஷம்குடா பகுதியில் போடா-அமடா சேவாஸ்ரம பள்ளி உள்ளது. மாணவர்கள் தங்கி படிக்கும் உண்டி-உறைவிடப் பள்ளி.
இங்கு 7 மற்றும் 8ம் வகுப்பில் படிக்கும் குறிப்பிட்ட சில மாணவிகளின் உடல் மற்றும் தோற்றத்தில் திடீர் மாற்றங்களை கவனித்த பள்ளி ஆசிரியை ஒருவர், இவர்களை தொடர்ந்து கண்காணித்தார்.
அந்த மாணவிகள் உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக உணர்ந்த ஆசிரியை இதுகுறித்து உள்ளாட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார்.
போலீசார் விசாரணை நடத்தியதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு பணியாளர்கள் சேர்ந்து இந்த மாணவிகளை தொடர்ந்து இரண்டு மாதங்களாக பாலியல் தொந்தரவு அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் பிரதீபா சாஹூ, துணை ஆசிரியர் ஈஸ்வர் போத்ரா, சமையல்கார பாத்மான் போத்ரா ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு மாநில கல்வி அமைச்சர் பிரதாப்ஜெனா உத்தரவிட்டுள்ளார்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’