வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

வன்னி மாவட்டத்தில் ஈ.பி.டி.பி. வீணைச் சின்னத்தில் போட்டி!

இம்முறை ஏப்ரல் 8ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றப் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வீணைச் சின்னத்தில் வன்னி மாவட்டத்தில் 9 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இன்றைய தினம் 9.00 மணியளவில் வவுனியா கச்சேரியில் உள்ள தேர்தல் செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது. வன்னி தேர்தல் மாவட்டத்தில் தலைமை வேட்பாளராக சிவன் சிவகுமார் (ரகு) இவருடன் அந்தோனிப்பிள்ளை ஜெயராஜ் (கிருபன்) செபமாலை திசைவீரசிங்கம் (லிங்கேஸ்) சுப்பையா சந்துரு சவுந்தரநாயகம் பெனடிக்ற் தயாளன் (நிர்மல்) பொன்னையா இரத்தினம் (குலம்) அந்தோனி அன்டனிதாஸ் பீரிஸ் (பாபுஜி) சிவசுந்தரம் கனகேந்திரன் ஏபிரகாம் ஜீவராசா ஆகியோர் வேட்பாளர்களர்களாகப் போட்டியிடுகின்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’