
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக நாளை புதன்கிழமை உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரத்தியேகமான சட்டத்திரணிகள் குழுவொன்று உரிய ஆவணங்களை தயார்படுத்தி வருவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
பொன்சேகாவின் கைதினைக் கண்டித்து கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரிச் சந்தியில் நாளை முற்பகல் 11 மணிக்கு சத்தியாக்கிரக போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’