வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

புத்தளம் தலைமை கிராம அதிகாரி காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு


புத்தளம் பிரதேச செயலகப் பிரிவில் கிராம அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றிவந்த கொத்தான்தீவை சேர்ந்த எம். றாசிக் என்பவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக முந்தல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவைக்கு சென்ற றாசிக்,அங்கிருந்து வாகனமொன்றில் அழைத்து செல்லப்பட்டதாகவும், இன்று வரை அவர் வீடு வந்து சேரவில்லையென்றும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இறுதியாக தொலைபேசியில் உரையாடிய போது தான் தற்போது மட்டக்களப்புக்கு பிரஸ்தாப வாகனத்தில் பயணிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் குறித்த தகவல் தெரிந்தோர் புத்தளம் பிரதேச செயலகத்தின் இலக்கமான 0322265358 அல்லது புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கமான 0322265422 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு வழங்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’