வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

தூங்கிய நர்ஸ்: இன்குபேட்டர் எரிந்து குழந்தை பலி.


நாக்பூர்: மருத்துவமனையில் பணியில் இருந்த நர்ஸ் தூங்கிய நிலையில், இன்குபேட்டர் தீப்பிடித்து எரிந்து குழந்தை பலியானது.

நாக்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூர் மருத்துவமனையில், பிறந்து நான்கு நாளே ஆன குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.

எடை குறைவாக இருந்த இக்குழந்தை கடந்த 19 ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது.

குழந்தையை இன்குபேட்டரில் வைத்து கண்காணிக்க வேண்டிய நர்ஸ், வெப்ப நிலையை முறையாக கண்காணித்து மாற்றாமல், பணி நேரத்திலேயே தூங்கிவி்ட்டார்.

இதனால் இன்குபேட்டரில் வெப்பம் அதிகமாகி தீப்பிடித்தது. அதில் இருந்த குழந்தையும் உயிரோடு எரிந்துவிட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் விஜய் குமார் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’