வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

சரத் கைது குறித்த ஆர்ப்பாட்டத்தில் அநுராதபுரத்திலும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்


ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து அநுராதபுரத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட முறுகலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மற்றுமொரு குழுவினர் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றைய குழுவினரைத் தாக்க முயற்சித்துள்ளனர்.

நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமையும் ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கவை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’