வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

நாடு பிரிந்துள்ளதா? மனோ கணேசன் கேள்வி


கண்டிக்கு வரவேண்டாம் என்று சொல்லும் ஹெல உறுமய கட்சியின் கோஷம் இந்த நாடு பிளவுபடவில்லை என்ற வாதத்திற்கு எதிரானதாகக் காணப்படுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டி மாவட்டம் ஹெல உறுமயவுக்கு மாத்திரம் உரியது என அவர்கள் கூறுவதானால் இந்த நாடு பிரிந்துள்ளது என்ற அச்சத்தை அது உருவாக்குகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று ஜாதிக ஹெல உறுமய கட்சியினர் 'மனோ கணேசன் கண்டிக்கு வரவேண்டாம்' எனக் கூறி ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர்.

அதற்கு கருத்து தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேற்கண்டவாற கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கொழும்பிலிருந்து கண்டிக்கு வந்தவன் அல்ல. கண்டியிலிருந்து கொழும்புக்கு வந்து, மீண்டும் கண்டிக்கு வந்துள்ளேன். எனது தந்தை அம்பிட்டிய என்ற ஊரைச் சேர்ந்தவர். நான் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியில் கல்வி கற்றவன். என்னை கண்டிக்கு வரவேண்டாம் என்று அவர்கள் கூறுவதானால் நாடு (இலங்கை) பிரிந்துள்ளது என்ற அச்சத்தை உருவாக்குகின்றது என்றார்.

அத்துடன், இலவசமாக தனக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்கின்றமைக்காக ஹெல உறுமய கட்சியினருக்கு தாம் நன்றி கூறுவதாகவும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’