வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 27 பிப்ரவரி, 2010

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா ஆரம்பம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு கச்சதீவு திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சதீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கச்சதீவில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை 28ஆம் திகதி காலை திருப்பலி, தேர்பவனி நிகழ்வுகளுடன் நிறைவு பெறும்.
கச்சதீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்க இராமேஸ்வரம் சுற்றுப்பகுதி தீவு மக்கள் கூட்டம், கூட்டமாக வி‌சைப்படகு மூலம் புறப்பட்டு சென்றவண்ணம் உள்ளனர்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரினால், 1978 ல் நிறுத்தப்பட்ட, கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா, 22 ஆண்டுகளுக்கு பின் மீண்டும், 2001 ல் நடந்தது. தொடர்ந்து இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், 2005 வரை நடந்த, அந்தோனியார் திருவிழாவில் மன்னார், நெடுந்தீவு பகுதியிலிருந்தும் இராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

2006 ல் இலங்கை இராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே, யுத்தம் உக்கிரமாக நடந்ததால் பாதுகாப்பு கருதி, கச்சதீவு திருவிழாவை இலங்கை அரசு நிறுத்தியது.

தற்போது, இலங்கையில் அமைதி திரும்பியுள்ள நிலையில், இந்த ஆண்டு கச்சதீவு திருவிழாவை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர், கச்சதீவு திருவிழாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கச்சதீவில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை 28ஆம் திகதி காலை திருப்பலி, தேர்பவனி நிகழ்வுகளுடன் நிறைவு பெறும்.

விழாவில் தமிழகத்திலிருந்தும், பக்தர்கள் பங்கேற்க ஆயர் பேரருட்திரு தோமஸ் சௌந்தரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார். யாழ்ப்பாணம் மறைமாவட்ட முதன்மை குரு அருட்திரு. ஞானப்பிரகாசம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு சூசை மாணிக்கம், இராமேஸ்வரம் வேர்கோட்டு புனித சூசையப்பர் ஆலய பங்குத் தந்தை அருட்திரு மைக்கேல் ராஜ் ஆகியோருக்கு இது குறித்து ஆயர் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை இராமேஸ்வரம் ஒட்டிய பாம்பன், மண்டபம், தங்கச்சி மடம் மற்றும் அருகில் உள்ள தீவுப்பகுதி மக்கள் இராமேஸ்வரம் வந்தனர். நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் குடும்பத்தோடு ஆர்வமாக புறப்பட்டு சென்றவண்ணம் உள்ளனர்.

இந்திய, இலங்கை கடற்படையினர் பக்தர்களிடம் ‌சோதனை நடத்துகின்றனர். அடையாள அட்டை முக்கியமாக பரிசோதிக்கப்படுகிறது. 2 நாட்கள் விழாவை முடித்து நாளை மறுநாள் பக்தர்கள் இராமேஸ்வரம் திரும்புவர். விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று இலங்கை தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’