வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

50 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டுள்ளது


50 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்டுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடல் வழியாக படகுகளின் மூலம் வடமத்திய கடற்பரப்பின் ஊடாக 125 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் கடத்தப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

அண்மையில் 30 கிலோ கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட ஹெரோயின் போதைப் பொருளில் 60 கிலோ கிராம் கொழும்பிற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய வாகன உரிமையாளர்களையும் பொலிஸார் கைது செய்து விசாரித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’