
தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கியதுடன் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சிறுமிக்கு சூடு வைத்த சந்தேகத்தின்பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அவிசாவளைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்தபோது தந்தை கூறிய ஏதோ ஒரு வேலையை செய்யாமல் சிறுமி அடம்பிடித்தார் எனவும், இதனால் கோபமுற்ற தந்தை, மகளை சரமாரியாக தாக்கியதுமல்லாமல் இரும்புக் கம்பியொன்றை சூடாக்கி அவரது உடலில் சூடு வைத்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் கதறலைக் கேட்டு அங்கு திரண்ட அயலவர்கள் உடனடியாக பொலீசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீக்காயத்துக்கு உள்ளான குழந்தை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’