
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய உயர்பாதுகாப்பு பகுதியில், நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இரண்டு தமிழ் இளைஞர்களும் இரண்டு சிங்கள இளைஞர்களுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தம்மை அடையாளப்படுத்த தவறியமையே கைதுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடங்களில் உள்ள இளைஞர்களும் யுவதிகளும், ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியுள்ள நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’