
கண்கள் திறந்துதான் இருக்கின்றன
பார்வை மட்டும் உனக்கு
எப்போதும் ஒரே திசையில்,
தனிமை இருட்டில்
உனக்கே உனக்குச் சொந்தமான
மெல்லிதயக் கொடி தவித்துக்கிடக்கிறது,
மின்சாரக் கம்பம்
பாம்பின் வால்
புலியின் கால்
என்று எது அகப்பட்டாலும்
அவசரமாய்த் தொற்றித் தப்ப,
அப்போதும்
ஒரே திசையில்தான் உன் பார்வை
ஒட்டிக்கிடக்கப் போவதால்
நட்டமென்று ஏதுமில்லைதான்
உனக்கு.....













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’