வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 டிசம்பர், 2009

மட்டக்களப்பில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்


வவுனியாவிலுள்ள இடைத்தங்கல் முகாம்களிலிருந்து அழைத்து வரப்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்களில் இரண்டாவது தொகுதியினருக்கு சமாதானத்திற்கான பல் சமய ஒன்றியத்தினால் அத்தியாவசிய பாவனைப் பொருட்களடங்கிய நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

இலங்கை - அமெரிக்கன் மிஷன் உதவியுடன் இந்நிவாரணப் பொருட்கள் கொக்கட்டிச்சோலை ,களுவாஞ்சிக்குடி மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுகளில் மீளக் குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கே இரண்டாவது தொகுதியாக இவை வழங்கப்பட்டன.

சமாதானத்திற்கான பல் சமய ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.கணேஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - திருகோணமலை துணை ஆயர் வண.ஜோசப் பொன்னையா ஆண்டகை மற்றும் அகில இலங்கை ரமண மகரிஷி அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் என்.செல்லத்துரை ஆகியோர் நிவாரணப் பொருட்களை உரியவர்களிடம் கையளித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’